குழந்தைகளின் இலவச கட்டாயக் கல்வி உரிமைச் சட்டம் - 2009

(01.04.2010  முதல்  நடைமுறைக்கு  வந்துள்ளது)
-மனித  உரிமைக்  கல்வி  நிறுவனம்

அத்தியாயம் 01
முன்னுரை

1.தலைப்பு

1.  இச்சட்டம்  “குழந்தைகளின்  இலவச  கட்டாயக்  கல்வி  உரிமைச்  சட்டம்  2009  என்று  அழைக்கப்படும்.

2.   இந்தச்  சட்டம்  ஜம்மு  காஸ்மீர்  மாநிலம்  தவிர்த்து  இந்தியா  முழுவதற்கும்  பொருந்தும்.

3.  மத்திய  அரசு  அதன்  அதிகாரப்பூர்வ  அரசிதழில்  வெளியிட்ட  நாளிலிருந்து  நடைமுறைக்கு  வரும்.

2.  சொற்பொருள்  விளக்கம்

1. “அரசு”   என்பது

மத்திய,  மாநில  அரசுகளால்  நிறுவப்பட்ட / சொந்தமான/ கட்டுப்பாட்டிற்கு  உட்படும்  பள்ளிகள்  இச்சட்ட  வரையறைக்குள்  அடங்கும்.  இந்த  வரையறை  யூனியன்  பிரதேசத்திற்கும்  பொருந்தும்.

2.  இச்சட்டத்தில்  தரப்பட்டிருக்கும்  “தலைக்  கட்டணம்”  என்ற  சொல்  பள்ளியில்  வசூலிக்கப்படும்  நன்கொடை,  கூடுதல்  கட்டணம்  செலுத்துதல்  ஆகியவற்றைக்  குறிக்கும்.

3.  “குழந்தை”  என்ற  சொல்  6  முதல்  14  வயது  வரை  இருபால்  குழந்தையைக்  குறிக்கும்.


4.  ”ஒதுக்கப்பட்ட  பிரிவை  சார்ந்த  குழந்தை” - தாழ்த்தப்பட்டோர்,  பழங்குடியினர்,  சமூக  ரீதியாக  பிற்படுத்தப்பட்டோர்  அல்லது,  அரசாங்கத்தால்  அதிகாரப்பூர்வமாக  வரையறுக்கப்பட்ட   சமூகம்,  கலாச்சாரம்,  பொருளாதாரம்,  நிலப்பரப்பு,  மொழி,  பாலினம்  எனும்  அடிப்படைகளில்  பாகுபடுத்தப்பட்ட  பிரிவைச்   சார்ந்த  குழந்தைகள்.

5.  “நலிந்த  பிரிவைச்  சார்ந்த  குழந்தை”  அரசால்  வரையறுக்கப்பட்ட  வறுமைக்  கோட்டிற்கு  கீழ்  உள்ள  குடும்பங்களைச்  சார்ந்த  குழந்தைகள்.

6.  “தொடக்கக்கல்வி” - முதல்  வகுப்பிலிருந்து  எட்டாம்  வகுப்பு  வரையிலான  கல்வி.

7.  “பாதுகாவலர்” - குழந்தையைத்  தன்  பொறுப்பில்  வைத்து  வளர்க்கும்  ஒருவர்,  அல்லது  நீதிமன்றத்தாலோ அல்லது  சட்டப்பூர்வமாகவோ  பாதுகாவலர்  என்று  அறிவிக்கப்பட்டவர்.

8.  ”உள்ளாட்சி  அமைப்பு” - மாநகராட்சி  அல்லது  நகராட்சி  அல்லது  மாவட்ட  ஊராட்சி  ஒன்றியம்  அல்லது  நகர  ஊராட்சி  அல்லது  கிராம  ஊராட்சி.

9.  “தேசிய  குழந்தை  உரிமைகள்  பாதுகாப்பு  ஆணையம்” - குழந்தை  உரிமைகள்  பாதுகாப்பு  ஆணையங்கள்  சட்டம்  2005  பிரிவு  3ன்  கீழ்  அமைக்கப்பட்ட  தேசிய  குழந்தை  உரிமைகள்  பாதுகாப்பு  ஆணையத்தைக்  குறிக்கும்.

10.  “பள்ளி”  என்பது  தொடக்கக்  கல்வியை  வழங்குகிற  அங்கீகரிக்கப்பட்ட  பள்ளி  என்று  பொருள்படும்  -  அது  பின்வரும்  பள்ளிகளை  உள்ளடக்கியதாகும்.

அ.  அரசு  அல்லது  உள்ளாட்சி  நிர்வாகத்தால்  நிறுவப்பட்டு,  சொந்தமாக  உள்ள,  அவைகளின்  நேரடி  கட்டுப்பாட்டிற்குள்  செயல்படுகின்ற  பள்ளிகள்;

ஆ.  அரசு  அல்லது  ஊராட்சி  நிர்வாகத்திடமிருந்து  நிதியுதவிப்  பெறும்  தனியார்ப்  பள்ளிகள்.

இ.  தனித்து  வகுத்துரைக்கப்பட்ட  சிறப்புப்  பள்ளிகள்  (கேந்திய  வித்யாலயா,  நவோதயா  வித்யாலயா,  சைனிக்  பள்ளி)

ஈ.  அரசு  அல்லது  உள்ளாட்சி  நிர்வாகத்திடமிருந்து  நிதியுதவிப்  பெறாத  பள்ளிகள்.

11.  “மாணவர்  பள்ளியில்  சேர்க்கும்  முறை”  குழந்தைகளைப்  பள்ளியில்  சேர்க்கின்ற  போது  மேற்கொள்ளப்படும்  தேர்வு  முறை.

12.  “மாநில  குழந்தை  உரிமைகள்  பாதுகாப்பு  ஆணையம்”  என்பது  குழந்தை  உரிமைகள்  பாதுகாப்பு  ஆணையங்கள் - சட்டம்  2005ன்  கீழ்  அமைக்கப்படுகின்ற  ஆணையம்.

அத்தியாயம்  -  02

இலவச  கட்டாயக்  கல்வி  உரிமை

3.  குழந்தைகளின்  இலவச  கட்டாயக்  கல்வி  உரிமை

1.  6  முதல்  14  வயது  வரை  உள்ள  ஒவ்வொரு  குழந்தைக்கும்  ஒரு  அண்டைப்  பள்ளியில்  தொடக்கக்  கல்வி  முடியும்  வரை  இலவசமாக,  கட்டாயமாகக்  கல்வி  பெறுவதற்கு  உரிமை  உண்டு.

2.  இப்பள்ளியில்  படிக்கும்  குழந்தைகள்  கட்டணங்கள்  செலுத்தவோ  செலவுகள்  செய்யவோ  வேண்டியதில்லை.

மாற்றுத்  திறனுடைய  குழந்தைகளுக்கு  இலவச  கட்டாய  தொடக்கக்  கல்வி  பெறுகிற  உரிமை  உண்டு.

4.  பள்ளிச்  சேர்க்கை  இல்லாத  அல்லது  தொடக்கக்  கல்வியை  முடிக்காத  குழந்தைகளுக்கான  சிறப்பு  விதிகள்

*.  6  வயதுக்கு  மேற்பட்ட  ஒரு  குழ்ந்தை  பள்ளியில்  சேர்க்கப்படவில்லை  என்றால்

*.  சேர்க்கப்பட்டு  தொடக்கக்  கல்வியை  முடிக்க  இயலவில்லையென்றால்   அப்போது  உள்ள  வயதிற்கு  பொருத்தமான  வகுப்பில்  சேர்க்க   வேண்டும்.

*.  இம்மாதிரியான  குழந்தைகள்  ஏனைய  குழந்தைகளுக்கு  இணையான  அறிவைப்  பெறும்  வகையில்  சிறப்புப்  பயிற்சியை  அளிக்க  வேண்டும்.

*.  14  வயதிற்கு  பிறகும்  கூட  தொடக்கக்  கல்வியை  முடிக்கா  நிலையில்  இவர்களுக்கும்  இலவசக்  கல்வி  பெறும்  உரிமை  உண்டு.

5.  பள்ளியை  மாற்றிக்  கொள்ளும்  உரிமை

ஒரு  குறிப்பிட்ட  பள்ளியில்  படிக்கும்  குழந்தைக்கு  அந்தப்  பள்ளியில்  படிப்பை  தொடர  முடியாத  சூழல்  ஏற்பட்டால்  பள்ளியை  மாற்றிக்  கொள்வதற்கான  உரிமை  உண்டு.  தொடக்கக்  கல்வியை  முடிப்பதற்கு  வழியில்லாத,  ஒரு  பள்ளியில்   பயிலும்  ஒரு  குழந்தைக்குத்  தனது  தொடக்கக்  கல்வியை  முடிப்பதற்காக  வேறு  பள்ளிக்கு  மாற்றக்  கோரும்  உரிமை  உண்டு.  இவ்வாய்ப்பு  அரசு  மற்றும்  அரசுதவி  பெறும்  பள்ளிகளுக்கு  மட்டுமே  பொருந்தும்.

2.  தொடக்கக்  கல்வியை  முடிக்க  ஒரு  மாநிலத்திற்கு  உள்ளேயோ  அல்லது  மாநிலத்திற்கு  வெளியேயோ  வேறொரு  பள்ளிக்கு  மாற வேண்டிய  அவசியம்  வருமானால்  மாற்றுமாறு  கோர  உரிமை  உண்டு.  இவ்வாய்ப்பு  அரசு  மற்றும்  அரசுதவி  பெறும்  பள்ளிகளுக்கு  மட்டுமே  பொருந்தும்.

3.  வேறொரு  பள்ளியில்  சேர்வதற்கு  பள்ளியின்  தலைமை  ஆசிரியர்  அல்லது  பொறுப்பாளர்  உடனடியாக  மாற்றுச்  சான்றிதழ்  வழங்க  வேண்டும்.

மாற்றுச்  சான்றிதழ்  வழங்க  தாமதப்படுத்தும்  பள்ளியின்  தலைமையாசிரியர்  அல்லது  பொறுப்பாளர்  மீது  பணி  விதிகளின்  கீழ்  ஒழுங்கு  நடவடிக்கை  எடுக்கப்படும்.

அத்தியாயம் - 03

அரசு,  உள்ளாட்சி  அமைப்புகள்,  பெற்றோர்  கடமைகள்

6.  அரசும்  மற்றும்  உள்ளாட்சி  அமைப்புகளும்  அண்டைப்  பள்ளிகள்  இல்லாதிருக்குமானால்  இச்சட்டம்  சட்ட  நடைமுறைக்கு  வந்த  மூன்று  ஆண்டுகளுக்குள்  நிறுவிட  வேண்டும்.

7.  நிதி  மற்றும்  இதர  பொறுப்புகள்

1.  இந்தச்  சட்டத்தின்  விதிகளைச்  செயல்படுத்தவும்  நிதி  வழங்கவும்  மத்திய  மற்றும்  மத்திய  அரசுக்குப்  பொதுப்  பொறுப்பு  உண்டு.

2.  இச்சட்ட  விதிகளைச்  செயலாக்குதற்குரிய  முதலீடு  மற்றும்  செலவுகள்  குறித்த  மதிப்பீட்டை  மத்திய  அரசு  தயாரிக்க  வேண்டும்.

3.  மத்திய  அரசு  மாநில  அரசுகளின்  செலவுகளுக்கான   விகிதாச்சாரத்தை  வருவாய்  நிதி  ஒதுக்கீடுகளாக  வழங்க வேண்டும்.

4.  மாநில  அரசுகளுக்குக்  கூடுதல்நிதி  வழங்கும்  வகையில்  நிதி  ஆணையத்தைக்  கேட்டுக்  கொள்ள  குடியரசுத்  தலைவரைக்  கேட்டுக்  கொள்ளலாம்.

5.  மத்திய  அரசு  தரும்  நிதியினை  வைத்துக்  கொண்டு  மாநில  அரசு  இச்சட்ட  விதிகளை  முறையாகச்  செயல்படுத்த   நிதி  வழங்க  வேண்டும்.

6.  மத்திய  அரசாங்கம்  மேற்கொள்ளும்  நடவடிக்கைகளை,

அ.  அதிகாரப்பூர்வ  கல்வி  அமைப்பின்  உதவியோடு  தேசிய  பாடத்திட்டத்திற்கான  ஒரு  சட்ட  வரைமுறையை  உருவாக்கும்.

ஆ.  ஆசிரியர்கள்  பயிற்சிக்கான  தர  நிர்ணயங்களை  வகுக்கும்.

இ.  புதிய  கண்ணோட்டங்கள்,  ஆய்வுகள்,  திட்டம்  மற்றும்  திறன்  வளர்ப்பு  ஆகியவற்றிற்குத்  தொழில்  நுட்ப  ஒத்துழைப்பும்  ஆதாரங்களையும்  மாநில  அரசுகளுக்கு  வழங்கும்.

8.  அரசின்  கடமைகள்

அ.  ஒவ்வொரு  குழந்தைக்கும்  இலவச,  கட்டாயத்  தொடக்கக்  கல்வியை  வழங்குதல்.

அரசு  யாருடைய  செலவை  ஈடுகட்டாது.

அரசு,  உள்ளாட்சி  அமைப்பு - இவைகளால்  நிறுவப்படாத,  கட்டுப்பாட்டிற்குள் வராத,  நிதியுதவிப்  பெறாத  பள்ளிகளில்  சேர்க்கப்பட்டிருக்கும்  குழந்தைக்கு  அந்தக்  குழந்தையின்  பெற்றோர்  அல்லது  பாதுகாப்பாளருக்குத்  தொடக்கக்  கல்வி  அளிப்பதில்  ஏற்படும்  செலவை  ஈடுகட்டுமாறு  கோருவதற்கு  உரிமை  இல்லை.

விளக்கம் - “கட்டாயக்  கல்வி  என்ற  சொல்லின்  பொருள்”  பின்வருமாறு :

அ.  அரசு  6 முதல்  14  வயது  வரை  உள்ள  ஒவ்வொரு  குழந்தைக்கும்  இலவச,  கட்டாயத்  தொடக்கக்  கல்வி  வழங்குதல்.

ஆ. அரசு  ஒவ்வொரு  குழந்தையும்  தொடக்கக்  கல்வி  பெறும்  வகையில்  அண்டைப்பள்ளி  ஒன்றை  உருவாக்குவதை  உறுதிச்  செய்ய  வேண்டும்.

இ.  நலிந்த  மற்றும்  ஒதுக்கப்பட்ட  பிரிவைச்  சார்ந்த  குழந்தைகளுக்கு  எவ்வித  பாகுபாடு  காட்டப்படாமல்  தொடக்கக்கல்வியை  முடிக்க  அரசு  உறுதியான  நடவடிக்கை  எடுக்க  வேண்டும்.

ஈ.  பள்ளிக்  கட்டடம்,  ஆசிரியர்கள்  மற்றும்  கற்றல்  கருவிகள்  உள்ளிட்ட  உட்கட்டுமானங்களை  அரசு  வழங்க  வேண்டும்.

உ.  பள்ளிகளில்  சிறப்புப்  பயிற்சிக்கான  வசதிகளை  வழங்க  வேண்டும்.

ஊ. ஒவ்வொரு  குழந்தையும்  பள்ளியில்  சேர்க்கப்பட்டு,  தொடர்ந்து  வருகை  தந்து  தொடக்கக்  கல்வியை  முடிப்பதை  கண்காணிக்க  வேண்டும்.

எ.  நல்ல,  தரமான  தொடக்கக்  கல்வி  கிடைப்பதை  அட்டவணையில் குறிப்பட்டுள்ளபடி  நடைமுறைப்படுத்த  வேண்டும்.

ஏ,  பாடத்திட்டம்  தயாரித்தல்,  பாட  வகுப்புகளை  நிர்ணயித்தல்  உரிய  காலத்தில்  நடத்தப்படலை   உறுதிப்பட  வேண்டும்.

ஐ.  ஆசிரியர்களுக்கான  பயிற்சி  வசதிகளை  வழங்க  வேண்டும்.

9.  உள்ளாட்சி  அமைப்பின்  கடமைகள்

ஒவ்வொரு  குழந்தைக்கும்  இலவச,  கட்டாய  கல்வியை  வழங்க  வேண்டும்.

அ.  அரசு,  உள்ளாட்சி  அமைப்பு - இவைகளால்  நிறுவப்படாத,  கட்டுப்பாட்டிற்குள்  வராத,  நிதியுதவிப்  பெறாத  பள்ளிகளில்  சேர்க்கப்பட்டிருக்கும்  குழந்தைக்கு  அந்தக்  குழந்தையின்  பெற்றோர்  அல்லது  பாதுகாப்பாளருக்குத்  தொடக்கக்  கல்வி  அளிப்பதில்  ஏற்படும்  செலவை  ஈடுகட்டுமாறு  கோருவதற்கு  உரிமை  இல்லை.

ஆ.  அரசு  ஒவ்வொரு  குழந்தையும்  தொடக்கக்கல்வி  பெறும்  வகையில்  அண்டைப்பள்ளி  ஒன்றை  உருவாக்குவதை  உறுதிச்  செய்ய   வேண்டும்.

இ.  நலிந்த  மற்றும்  ஒதுக்கப்பட்ட  பிரிவைச்  சார்ந்த  குழந்தைகள்  எவ்வித  பாகுபாடு  காட்டப்படாமல்  தொடக்கக்  கல்வியை  முடிக்க  அரசு  உறுதியான  நடவடிக்கை  எடுக்க  வேண்டும்.

ஈ.  ஊராட்சி  அமைப்பின்  அதிகார  எல்லைக்குட்பட்ட  பகுதியில்,  வசிக்கும்  14 வயது  வரை  உள்ள  குழந்தைகள்  பற்றிய  விபரங்களைச்  சேகரித்து  பராமரிக்க  வேண்டும்.

உ.  ஒவ்வொரு  குழந்தையும்  பள்ளியில்  சேர்க்கப்பட்டு,  தொடர்ந்து  வருகை  தந்து  தொடக்கக்  கல்வியை  முடிப்பதைக்  கண்காணிக்க  வேண்டும்.

ஊ.  பள்ளிக்  கட்டடம்,  ஆசிரியர்கள்  மற்றும்  கற்றல்  கருவிகள்  உள்ளிட்ட  உட்கட்டுமானங்களை  அரசு  வழங்க  வேண்டும்.

எ.  சிறப்புப்  பயிற்சி  வசதிகளை  வழங்க  வேண்டும்.

ஏ.  நல்ல,  தரமான  தொடக்கக்  கல்வி  கிடைப்பதை  அட்டவணையில்  குறிப்பிட்டுள்ளபடி   நடைமுறைப்படுத்த  வேண்டும்.

ஐ.  பாடத்திட்டம்  தயாரித்தல்,  பாட  வகுப்புகளை  நிர்ணயித்தல்  உரிய  காலத்தில்  நடத்தப்படலை  உறுதிப்படுத்த  வேண்டும்.

ஒ.  ஆசிரியர்களுக்கான  பயிற்சி  வசதிகளை  வழங்க  வேண்டும்.

ஓ.  புலம்  பெயர்ந்த  குடும்பங்களின்  குழந்தைகள்  பள்ளியில்  சேர்க்கப்படுவதை  உறுதிப்படுத்த  வேண்டும்.

ஒள.  தனது  அதிகார  எல்லைக்கு  உட்பட்ட  பகுதியில்  பள்ளிகளின்  செயல்பாட்டைக்  கண்காணிக்க  வேண்டும்.

அ. கல்வி  ஆண்டைத்  தீர்மானிப்பது  இவ்வமைப்பின்  கடமையாகும்.

10.  பெற்றோர்  மற்றும்  பாதுகாவலரின்  கடமைகள்

தங்கள்  குழந்தை  அல்லது  தங்கள்  பொறுப்பில்  உள்ள  குழந்தைகளை,  அவரவர்தம்  நிலைமைக்கேற்ப,  அண்டைப்பள்ளி  ஒன்றில்  தொடக்கக்கல்வி  பெற  பள்ளியில்  சேர்ப்பதும்  அல்லது  சேர்க்க  வைப்பதும்  பெற்றோர்  அல்லது  பாதுகாவலரின்  கடமையாகும்.

11.  பள்ளிக்கு  முந்தைய  கல்வியை  வழங்குவதில்  அரசின்  பொறுப்பு

3வயதுக்கு  மேற்பட்ட  குழந்தைகளைத்  தொடக்கக்  கல்வி  பெற  தயார்ப்படுத்துவதற்காகவும்  6 வயது  நிறைவடையும்  வரையில்  அனைத்துக்  குழந்தைகளுக்கும்  தொடக்க  நிலை  குழந்தைப்  பருவ  கவனிப்பு  மற்றும்  கல்வி  கிடைக்கச்  செய்வதற்காகவும்  அரசு  இக்குழந்தைகளுக்கு  இலவசமாகப்  பள்ளிக்கு  முந்தைய  கல்வி  வழங்குவதற்குத்  தேவையான  வகை  செய்ய  வேண்டும்.

அத்தியாயம் - 04

பள்ளிகள்  மற்றும்  ஆசிரியர்களின்  பொறுப்புகள்

12.  இலவச  கட்டாயக்  கல்வி  வழங்குவதில்  பள்ளியின்  பொறுப்புகள்

1.  இந்தச்சட்டத்தின்  நோக்கங்கள்  நிறைவுற  ஒரு  பள்ளி  பின்வருமாறு  செயல்பட  வேண்டும்.

அ.  அரசு  மற்றும்  அரசுதவிப்  பெறும்  பள்ளிகளில்  சேர்க்கப்படும்  அனைத்து  குழந்தைகளுக்கும்  இலவச,  கட்டாயக்  கல்வி  வழங்க  வேண்டும்.

ஆ.  அரசுதவிப்  பெறா  தனியார்ப்  பள்ளிகள்  தனது  வருடாந்திர  செலவு  ஆகியவற்றிற்கு  உட்பட்டு,  குறைந்தது  25   விழுக்காடு  அளவிலான  விகிதாசாரப்படி  சேர்க்கப்பட்ட  குழந்தைகளுக்கு  இலவச  கட்டாயக்  கல்வி  வழங்க  வேண்டும்.

இ.  அரசுதவிப்  பெறா  தனியார்ப்  பள்ளிகள்  மற்றும்  தனித்து  வகுத்துரைக்கப்பட்ட  பள்ளிகளில்  முதல்  வகுப்பில்  குறைந்தது  25  விழுக்காடு  குழந்தைகளை  அண்டைப்  பகுதிகளிலுள்ள  நலிந்த  பிரிவுகள்  மற்றும்  ஒதுக்கப்பட்ட  பிரிவ்களைச்  சேர்ந்த  குழந்தைகளைக்  கண்டறிந்து  அவர்களுக்குத்  தொடக்கக்  கல்வி  முடியும்  வரையில்  இலவச,  கட்டாயக்  கல்வியை  வழங்க  வேண்டும்.

பிரிவு  2  விதி (n) ல்  குறிக்கப்பட்டுள்ள  ஒரு  பள்ளி,  பள்ளிக்கு  முந்தைய  கல்விக்காகக்  குழந்தைகளைச்  சேர்த்துக்  கொள்வது  என்பதற்கும்  பிரிவு (a),  (உ)  ஆகிய  விதிகள்  பொருந்தும்.

(2)  இலவச,  சட்டாயக்  கல்வி  வழங்குகிற  அரசுதவிப்  பெறா  தனியார்ப்  பள்ளிகள்,  அரசாங்கத்தால்  ஒரு  குழந்தைக்கு  இவ்வளவு  என  நிர்ணயிக்கப்பட்டுள்ள  செலவுத்  தொகையை  அல்லது  குழந்தையிடமிருந்து  வசூலிக்கப்பட்ட  உண்மைத்  தொகையை,  இவற்றில்  எது  குறைவோ  அந்தத்  தொகையை,  வகுத்தரைக்கப்பட்டுள்ள  வழிமுறைகளின்படி  ஈடு  செய்யக்  கோர  முடியும்.

இவ்வாறு  ஈடு  செய்யக்கொரும்  தொகையானது,  அரசு  மற்றும்  அரசுதவிப்  பெறும்  பள்ளியில்  வரையறுக்கப்பட்டுள்ளபடி  ஒரு  குழந்தைக்கு  இவ்வளவு  என  அரசாங்கத்தால்  நிர்ணயிக்கப்பட்ட  தொகைக்கு  மேல்  இருக்கக்  கூடாது.

இலவசமாகவோ  அல்லது  சலுகை  விலையிலோ  நிலம்,  கட்டம்,  கல்விச்  சாதனங்கள்  அல்லது  இதர  வசதிகளைப்  பெற்றுக்  கொண்டதற்காகக்  குறிப்பிட்ட  எண்ணிக்கையிலான  குழந்தைகளுக்கு  இலவசக்  கல்வி  வழங்கியாக  வேண்டிய  அளவு  வரையிலான  தொகையை  (அரசாங்கத்திடமிருந்து)  ஈடு  செய்யக்கோர  முடியாது.

(3)  ஒவ்வொரு  பள்ளியும்  உரிய  அரசு  அல்லது  உள்ளாட்சி  அமைப்பு   கோருகிற  மேற்கண்ட  தகவல்களைத்  தரவேண்டும்.

13.  பள்ளி  சேர்க்கைக்குக்  கல்வி  கட்டணம்,  தேர்வுமுறை  கூடாது

1. எந்தப்  பள்ளியும்  ஒரு  குழந்தையைச்  சேர்க்கும்  பொழுது  அதன்  பெற்றோர்  அல்லது  பாதுகாப்பாளரிடமிருந்து  எந்தவொரு  கல்விக்  கட்டணமும்  வசூலிக்கக்கூடாது.  குழந்தையை  எந்தவொரு  முன்  தேர்வு  நடைமுறைக்கும்  உட்படுத்தக்  கூடாது.

2.  எந்தவொரு  பள்ளியோ  அல்லது  நபரோ...

அ.  கல்விக்  கட்டணம்  வசூலித்தால்  வசூலிக்கப்பட்ட  கல்விக்  கட்டணத்தைப்  போல  10 மடங்கு  வரை  அபராதம்  தண்டனையாக  விதிக்கப்படும்.

ஆ.  குழந்தையைத்  தேர்வு  நடைமுறைக்கு  உட்படுத்தினால்  முதல்  தடவையாக  விதியை  மீறும்பொழுது  இருபத்து  ஐந்தாயிரம்  ரூபாய்  வரையில் அபராதம்  தண்டனையாக  விதிக்கப்படும்.  மீண்டும்  மீண்டும்  மீறும்பொழுது  ஒவ்வொரு   முறையும்  ஐம்பதாயிரம்  ரூபாய்  வரையில்  அபராதம்  விதிக்கப்படும்.

14.  பள்ளிச்   சேர்க்கைக்கான  வயது  சான்று

1.  தொடக்கக்  கல்விக்கு  குழந்தையைச்  சேர்ப்பதற்கு,  அந்த  குழந்தையின்  வயது  1986 ஆம்  ஆண்டின்  பிறப்பு  இறப்பு  மற்றும்  திருமணப்  பதிவுச்சட்ட  விதிகளின்கீழ்  வழங்கப்படும்  பிறப்புச்  சான்றிதழின்  அடிப்படையில்  அல்லது  அதுபோன்ற  இதர  ஆவணங்களின்  அடிப்படையில்  முடிவு  செய்யப்பட  வேண்டும்.

2.  வயது  சான்றிதழ்  இல்லாத  காரணத்திற்காக  எந்தவொரு  குழந்தைக்கும்  பள்ளிச்  சேர்க்கை  அனுமதி  மறுக்கப்படக்  கூடாது.

15.  பள்ளியில்  சேர்க்க  மறுத்தல்  கூடாது

கல்வி  ஆண்டு  தொடங்கும் போது  அல்லது  தீர்மானிக்கப்படும்  கால  வரையறைக்குள்  ஒரு  குழந்தைப்  பள்ளியில்  சேர்க்கப்படவேண்டும்.

நீட்டிக்கப்பட்ட  காலத்தை  ஒட்டி  பள்ளியில்  சேர்ப்பதற்கு  விண்ணப்பிக்கப்  படுமானால்  எந்தவொரு  குழந்தைக்கும்  சேர்க்கை  அனுமதி  மறுக்கப்பட  மாட்டாது.

மேலும்  நீட்டிக்கப்பட்ட  காலத்திற்குப்  பின்  சேர்க்கப்படும்  எந்தவொரு  குழந்தையும்,  அரசால்  வகுத்துரைக்கப்படும்  முறையில்  கல்வியை  முடிக்கலாம்.

16.  ஒரே  வகுப்பில்  இருக்க  வைத்தல்  மற்றும்  வெளியேற்றுவதற்குத்  தடை

ஒரு  பள்ளியில்  சேர்க்கப்படும்  எந்தவொரு  குழந்தையும்  தொடக்கக் கல்வி  முடியும்  வரையில்  தோல்வி  என்ற  பெயரில்  எந்தவொரு  வகுப்பிலும்  தொடர்ந்து  இருக்க  வைக்கப்படக்கூடாது;  மேலும்  பள்ளியிலிருந்து  வெளியேற்றவும்  கூடாது.

17.  குழந்தைக்கு  உடல்  ரீதியான  தண்டனை  அல்லது  மன  ரீதியான  துன்புறுத்தல்  ஏற்படுத்த  தடை

1.  எந்தவொரு  குழந்தையும்  உடல்  ரீதியான  தண்டனைக்கோ  மன  ரீதியான  துன்புறுத்தலுக்கோ  உள்ளாக்கக்கூடாது.

2.  மீறுவோர்  மீது  பணி  விதிகளின்படி  ஒழுங்கு  நடவடிகை  எடுக்கப்படும்.

18.  அங்கீகாரச்  சான்றிதழ்  பெறாமல்  எந்தவொரு  பள்ளியும்  நிறுவப்படக்கூடாது

1.  அரசு  அல்லது  உள்ளாட்சி  அமைப்புகளால்  நிறுவப்பட்டு  உடமையாக்கப்பட்டுக்  கட்டுப்படுத்தப்படுகிற  பள்ளியில்லா  வேறு  எந்தப்  பள்ளியும்,  இந்தச்  சட்டம்  நடைமுறைக்கு  வரத்  தொடங்கிய  பிறகு  உரிய  முறையில்  விண்ணப்பித்து  உரிய  அதிகார  அமைப்பிடமிருந்து  அங்கீகாரச்  சான்றிதழ்  பெறாமல்  நிறுவப்படவோ  செயல்படவோ  கூடாது.

2.  கல்வித்துறை  அதிகார  அமைப்பு,  வரையறைக்குட்பட்ட  முறையில்,  அதற்குரிய  காலத்திற்குள்,  அதற்குரிய  நிபந்தனைகளுக்கு  உட்பட்டு  அங்கீகாரச்  சான்றிதழ்  வழங்க  வேண்டும்.

வரையறுக்கப்பட்டுள்ள  நடைமுறைகள்  மற்றும்  தரங்களை  நிறைவு  செய்யாத  பள்ளிக்கு  அங்கீகாரச்  சான்றிதழ்  வழங்கப்பட மாட்டாது.

3.  பள்ளி  அங்கீகாரத்திற்கான  நிபந்தனைகள்  மீறப்படுமானால்  உரிய  அதிகார  நிர்வாகம்  அங்கீகாரத்தை  எழுத்துப்பூர்வ  ஆணைப்படி  விலக்கிக்  கொள்ளும்.

அங்கீகாரம்  மறுக்கப்படும்  பள்ளியில்  படிக்கும்  குழந்தைகள்  அடுத்து  எந்த  அண்டைப்  பள்ளியில்  சேர்க்கப்படுவார்கள்  என்பதற்கான  ஆணைகளும்  அந்த  ஆணையில்  சேர்க்கப்பட  வேண்டும்.

அங்கீகாரம்  கேள்விக்குள்ளாகும்  பள்ளிக்குச்  சுய  விளக்கம்  தர  வாய்ப்பளிக்காமல்  அதன்  அங்கீகாரத்தை  விலக்கிக்  கொள்ளக்  கூடாது.

4.  அங்கீகாரம்  விலக்கிக்  கொள்ளப்படும்  தேதியிலிருந்து  பள்ளி  செயற்படக்  கூடாது.

5.  அங்கீகாரச்  சான்று  பெறாமலோ  அங்கீகாரம்  விலக்கிக்  கொள்ளப்பட  பிறகோ  பள்ளியைத்  தொடர்ந்து  நடத்துகிற  எந்தவொரு  நபர்  மீதும்  நடத்துகிற  எந்தவொரு  நபருக்கும்  ஒரு  இலட்சம் ரூபாய்  வரையில்  தண்டனை  விதிக்கலாம்.  இத்தண்டனைக்குப்  பிறகும்  தொடர்ந்து  பள்ளி  நடத்துவோர்  தொடரும்  நிலையில்  நாளொன்றுக்குப்  பத்தாயிரம்  ரூபாய்  வரை  தண்டனைத் தொகை  விதிக்கப்படும்.

19.  பள்ளிக்கான  விதிகளும்  தரங்களும்

1.  அட்டவணையில்  குறிக்கப்பட்டுள்ள  விதிகள்  மற்றும்  தரங்களை  நிறைவு  செய்யா  எப்பள்ளியும்  நிறுவப்பெறலுகு  உரிமை  இல்லை.  அப்பள்ளிக்கு  அங்கீகாரம்  அளிக்கப்படமாட்டாது.

2.  இச்சட்டம்  நடைமுறைக்கு  வர  தொடங்குவதற்கு  முன்பே  அட்டவணையில்  கூறப்பட்டுள்ளபடி  விதிகள்  மற்றும்  தரங்களை  நிறைவு  செய்யாமல்  ஒரு  பள்ளி  நிறுவப்பட்டிருக்குமானால்,  அந்தப்  பள்ளி  தனது  சொந்தச்  செலவில்  மூன்றாண்டுகளுக்குள்  விதிகளையும்  தரங்களையும்  நிறைவு  செய்வதற்கான  நடவடிக்கைகளை  மேற்கொள்ள  வேண்டும்.

3.  இந்த  விதிகள்  மற்றும்  தரங்களை  நிறைவு  செய்ய  தவறும்  பள்ளியின்  அங்கீகாரம்  விலக்கிக்  கொள்ளப்படும்.

4.  அங்கீகாரம்  விலக்கிக்  கொள்ளப்பட்ட  தேதியிலிருந்து  பள்ளி  இயங்க  அனுமதியில்லை.

5.  அங்கீகாரம்  விலக்கிக்  கொள்ளப்பட்ட பிறகு  பள்ளியைத்  தொடர்ந்து  நடத்துகிற  எந்தவொரு  நபரும்,  ஒரு  இலட்சம்  ரூபாய்  வரையில்  தண்டனைத்  தொகைக்கு  உட்படுத்தப்படுவார்.  இந்த  விதி  மீறல்  தொடரும்  நிலையில்,  மீறல்  தொடரும்  நாளொன்றுக்கு  பத்தாயிரம்  ரூபாய்  அபராதம்  விதிக்கப்படும்.

20.  அட்டவணையைத்  திருந்துவதற்கான  அதிகாரம்

மத்திய  அரசாங்கம்,  அறிவிக்கை  மூலமாக,  எந்தவொரு  நடைமுறை  அல்லது  தரங்களைச்  சேர்த்தல்  அல்லது  நீகுதல்  மூலமாக  அட்டவணையில்  திருத்தம்  செய்யலாம்.

21.  பள்ளி  நிர்வாகக்  குழு

1.  உள்ளாட்சி  நிர்வாகத்தின்  தேர்ந்தெடுக்கப்பட்ட  பிரதிநிதிகள்,  குழந்தைகளின்  பெற்றோர்  அல்லது  பாதுகாவலர்  மற்றும்  ஆசிரியர்கள்  கொண்ட  பள்ளி  நிர்வாகக்  குழு  ஒன்றை  அமைக்க  வேண்டும்.

உறுப்பினர்கள்

குழு  உறுப்பினர்களில்  நான்கில்  மூன்று  பகுதியினர்  பெற்றோர்  அல்லது  பாதுகாவலர்களாக  இருக்க  வேண்டும்.

ஒதுக்கப்பட்ட  மற்றும்  வறுமைக்  கோட்டிற்குக்  கீழ்  வாழும்  பிரிவுகளைச்  சார்ந்த  பெற்றோர்  அல்லது  பாதுகாவலர்களுக்கு  அக்குழுவில்  விகிதாச்சார  முறைப்படி பிரதிநிதித்துவம்  அளிக்கப்பட  வேண்டும்.

இக்குழுவின்  உறுப்பினர்களில்  ஐம்பது  விழுக்காட்டினர்  பெண்களாக  இருக்க  வேண்டும்.

(2) பள்ளி  நிர்வாகக்  குழுவின்  பணிகள்

அ.  பள்ளியின்  செயல்பாடுகளிக்  கண்காணித்தல்.
ஆ.  பள்ளி  மேம்பாட்டுத்திட்டம்  தயாரித்தல்,  பரிந்துரைத்தல்
இ.  அரசு  அல்லது  உள்ளாட்சி  அமைப்பு  அல்லது  வேறு  மூலங்களிலிருந்து  கிடைக்கும்  நிதி  ஒதுக்கீடுகள்  பயன்படுத்தப்  படுவதைக்  கண்காணித்தல்  மற்றும்
ஈ.  விதிக்கப்  பெறும்  ஏனைய  பணிகளையும்  செய்தல்.

22.  பள்ளி  மேம்பாட்டுத்  திட்டம்

1.  ஒவ்வொரு  பள்ளி  நிர்வாகக் குழுவும்  பள்ளி  மேம்பாட்டுத்  திட்டம்  ஒன்றைத்  தயாரிக்க  வேண்டும்.

2.  இம்மேம்பாட்டுத்  திட்டமே  உரிய  அரசும்  உள்ளாட்சி  அமைப்பும்  நிதி  ஒதுக்கீடு  செய்வதற்கான  அடிப்படையாக  அமையும்.

23.  ஆசிரியர்கள்  நியமனத்திற்கான  தகுதிகளும்  நிபந்தனைகளும்

1.  மத்திய  அரசின்  அதிகாரப்பூர்வ  அறிக்கையின்படி  அதிகாரம் அளிக்கப்பட  கல்வித்துறை  அமைப்பு  வகுத்துள்ள  குறைந்தபட்ச  தகுதிகள்  உள்ள  எந்த  ஒரு  நபரும்  ஆசிரியராக  நியமிக்கப்படத்தகுதி  உள்ளவராவார்.

2.  ஒரு  மாநிலத்தில்  ஆசிரியர்  பயிற்சி  அளிப்பதற்குப்  போதுமான  நிறுவனங்களும்  குறைந்தபட்ச  தகுதிகள்  கொண்ட  ஆசிரியர்களும்  போதுமான  எண்ணிக்கையில்  இல்லாத  நிலையில்,  மத்திய  அரசாங்கம்  ஆசிரியர்  நியமனத்திற்கான  குறைந்தபட்சத்  தகுதிகளைத்  தளர்த்தலாம்.

குறிப்பிடப்பட்ட  குறைந்தபட்சத்  தகுதிகள்  ஒரு  ஆசிரியருக்கு  இல்லை  என்றால், அவர்  ஐந்தாண்டுகளுக்குள்  குறைந்தபட்சத்  தகுதிகளைப்  பெற  வேண்டும்.

(3) ஆசிரியர்களுக்கு  வழங்கப்படும்  ஊதியம்,  படிகள்  அவரது  பணிமுறைகள்  மற்றும்  பணி  நிபந்தனைகள்  ஏற்கனவே  விதிக்கப்பட  வகையில்  அமையும்.

24.  ஆசிரியர்களின்  கடமைகளும்  குறை  தீர்ப்பும்  ஆசிரியரின்  பணிகள்

அ.  பள்ளிக்குத்  தொடர்ந்தும்  உரிய  நேரப்படியும்  வருதல்.

ஆ.  பாடத்திட்டத்தை  முழுமையாக  நடத்தி  முடித்தல்.

இ.  முழு  பாடத்திட்டத்தையும்  வரையறுக்கப்பட்ட  கால  அளவுக்குள்  முடித்தல்;

ஈ.  ஒவ்வொரு  குழந்தையின்  கற்றல்  திறனையும்  மதிப்பிடுதல்,  தேவைப்படுமானால்  கூடுதல்  பயிற்சி  வழங்கி  ஈடுசெய்தல்;

உ.  பெற்றோர்  மற்றும்  பாதுகாப்பாளர்களுடன்  சந்திப்புக்  கூட்டங்களைத்  தொடர்ச்சியாக  நடத்தி,  குழந்தையின்  தொடர்ச்சியான  வருகை,  கற்றல்  திறன்,  கற்றலில்  ஏற்பட்டுள்ள  முன்னேற்றம்  மற்றும்  இதர  பொருத்தமான  தகவல்களைத்  தெரியவைத்தல்;

ஊ.  வகுக்கப்படும்  இதர  பணிகளையும்  செய்தல்

எ.  பள்ளியில்  வரையறுக்கப்பட்ட  கடமைகளை  ஒரு  ஆசிரியர்  செய்யத்  தவறுவாரானால்  பணிவிதிகளின்  கீழ்  ஒழுங்கு  நடவடிக்கைக்கு  உட்படுத்தப்படுவார்.

அவ்வாசிரியர்  மீது  ஒழுங்கு  நடவடிக்கை எடுக்கப்படுவதற்கு  முன்பாக  அவர்  தரப்பு  வாதத்தைக்  கேட்பதற்கும்  வாய்ப்பு  அளிக்க  வேண்டும்.

ஏ.  ஆசிரியருக்கு  குறைகள்  உரிய  முறையில்  தீர்க்க  வழிகாணப்படும்.

25.  மாணவர்  ஆசிரியர்  விகிதம்

1.  இந்த  சட்டம்  நடைமுறைக்கு  வர  தொடங்கிய  6  மாதங்களுக்குள்  அட்டவணையில்  வரையறுக்கப்பட்டுள்ளபடி  ஒவ்வொரு  பள்ளியிலும்  மாணவர் - ஆசிரியர்  விகிதம்  முறையாக  இருப்பதை  அரசு அல்லது  உள்ளாட்சி  அமைப்புகள்  உறுதிப்படுத்த  வேண்டும்.

2.  மாணவர் -  ஆசிரியர்  விகிதத்தைப்  பராமரிக்க  ஒரு  பள்ளியில்  நியமிக்கப்படும்  எந்தவொரு  ஆசிரியரும்  வேறு  பள்ளியிலோ  அல்லது  அலுவலகத்திலோ  பணியாற்றும்படி  செய்யக்கூடாது;  கல்வி  சாரா  வேறு  பணிகளுக்கு  அனுப்பக்கூடாது.

26.  ஆசிரியர்  காலி  பணியிடங்களை  நிரப்புதல்

அரசு  அல்லது  உள்ளாட்சி  அமைப்புகளால்  நேரடியாகவோ  மறைமுகமாகவோ  நிறுவப்பட்டு,  உடமையாக்கப்பட்டு  கட்டுப்பாட்டிலிருக்கிற  அல்லது   நிதி  வழங்கப்படுகிற  ஒரு  பள்ளி  தொடர்பான  நியமன  அதிகாரம்  கொண்ட  அமைப்பு,  அந்தப்பள்ளியில்  காலியாகும்  ஆசிரியர்  பணியிடங்கள்  எண்ணிக்கை  அனுமதிக்கப்பட்ட  மொத்த  ஆசிரியர்  பணியிடங்களின்  எண்ணிக்கை  10  விழுக்காட்டிற்கு  மேல்  சொல்லாமல்  இருப்பதை  உறுதிப்படுத்த  வேண்டும்.

27.  கல்விசாரா  நோக்கங்களுக்கு  ஆசிரியர்களை  அனுப்ப  தடை

மக்கள்தொகை  கணக்கெடுப்பு,  பேரிடர்  நிவாரண  பணிகள்  அல்லது  உள்ளாட்சி   அமைப்புக்கோ  மாநில  சட்டமன்றத்துக்கோ  நாடாளுமன்றத்துக்கோ  நடைபெறும்  தேர்தல்கள்  தொடர்பான  பணிகள்  தவிர  வேறு  கல்வி  சாராத  எந்தப்  பணிக்கும்  எந்த  ஒரு  ஆசிரியரும்  அனுப்ப  மாட்டார்கள்.

28.  ஆசிரியர்களின்  தனிப்பட்ட  பயிற்சி  அளிக்க  தடை

எந்தவொரு  ஆசிரியரும்  தனிப்பயிற்சி  (டியூசன்)  நடத்த அனுமதியில்லை.

அத்தியாயம் - 5

பாடத்திட்டமும்  தொடக்கக்  கல்வியை  முடித்தலும்

29.  பாடத்திட்டம்  மற்றும்  மதிப்பீட்டு  நடைமுறைகள்

1.  தொடக்கக்  கல்விக்கான  பாடத்திட்டத்தையும்  மதிப்பீட்டு  முறையை  உரிய  கல்வித்துறை  அதிகார  அமைப்பு  வகுத்தளிக்கும்.

2.  பாடத்திட்டத்தையும்  மதிப்பிடும்  நடைமுறையையும்  வகுக்கிற  கல்வித்  துறை  அதிகார  அமைப்பு   பின்வரும்  அம்சங்களைக்  கருத்தில்  கொள்ளும்.

3.  அரசியல்  சாசனத்தில்  கூறப்பட்டுள்ள  மதிப்பிடுகளுக்கு  ஒத்திசைந்ததாக  இருத்தல்.

4.  குழந்தையின்  முழு  வளர்ச்சி

5.   குழந்தையின்  அறிவு  மற்றும்  திறனை  வளர்த்தல்

6.  குழந்தைக்கு  இணக்கமான  முறையிலும்,  குழந்தையை  மையப்படுத்திய  முறையிலும்  செயல்வழி  கற்றல்,  கண்டறிதல்  மற்றும்  ஆராய்ந்தறிதல்  ஆகியவற்றை  வளர்த்தல்.

7.  பயிற்றுமொழி  என்பது  கூடிய  வரையில்  குழந்தையின்  தாய்மிழியிலேயே  இருத்தல்.

8.  குழந்தை  அச்சமின்றியும்  மன  உளைச்சல்  இன்றியும்  பதட்டமின்றியும்  பயில  செய்தல்,  குழந்தைத்  தன்  கருத்துகளைச்  சுதந்திரமாக  வெளிப்படுத்த  உதவுதல்.

9.  குழந்தையின்  அறிவு,  புரிதல்  மற்றும்  அதனை  செயல்படுத்தும்  திறன்  ஆகியவற்றை  விரிவாகவும்  தொடர்ச்சியாகவும்  மதிப்பிடுதல்.

30.  தேர்வு  மற்றும்  படிப்பை  முடிப்பதற்கான  சான்றிதழ்

1.  தொடக்கக்  கல்வியை  முடிக்கும்  வரையில்  எந்தவொரு   குழந்தையும்  எந்தவொரு  குழந்தையும்  எந்தவொரு  வாரிய (போர்டு)  தேர்வையும்  எழுதி  தேர்ச்சி  அடைய  வேண்டிய  அவசியமில்லை.

2.  தொடக்கக்  கல்வியை  முடிக்கிற  அனைத்துக்  குழந்தைக்கும்  சான்றிதழ்  வழங்கப்படும்.

அத்தியாயம் - 6

குழந்தை  உரிமைப்  பாதுகாப்பு

31.  குழந்தையின்  கல்வி  உரிமையைக்  கண்காணித்தல்

1.  தேசிய  குழந்தை  உரிமைகள்  பாதுகாப்பு  ஆணையம்  அல்லது  பிரிவு  17ன்  கீழ்  உருவாக்கப்படும்  மாநில  குழந்தை  உரிமைகள்  பாதுகாப்பு  ஆணையம்  அவைகளுக்கு  நிர்ணயிக்கப்பட்ட  பணிகளோடு  பின்வரும்  பணிகளையும்  மேற்கொள்ளும்.

அ.  இந்தச்  சட்டத்தால்  அல்லது  இந்த  சட்டத்தின்  கீழ்  வழங்கப்பட்ட  பாதுகாப்பு  அம்சங்களைப்  பரிசீலித்தல்,  மறு  ஆய்வு  செய்தல்,  அவற்றைப்  பயன்  தரும்  வகையில்  செயல்படுத்துவதற்கான  நடவடிக்கைகளைப்  பரிந்துரைத்தல்.

ஆ & இ.  புகாரின்  அடிப்படையில்  உரிய  நடவடிக்கை  எடுத்தல்.

2.  குழந்தையின்  இலவச  கட்டாயக்  கல்வி  தொடர்பான  எந்தவொரு  பிரச்சனையும்  விசாரிக்கிற  மேற்படி  ஆணையங்களுக்குக்  குழந்தை  உரிமைகள்  பாதுகாப்பு  அணையங்கள்  சட்டத்தின்  பிரிவு  14,  24  ஆகியவற்றின்  கீழ்  அவற்றுக்கு  வழங்கப்பட்டுள்ள  அதே  அதிகாரங்கள்  இருக்கும்.

3.  ஒரு  மாநிலத்தில்  மாநில  குழந்தைகள்  உரிமைகள்  பாதுகாப்பு  ஆணையம்  அமைக்கப்படாத  நிலையில்,  உரிய  மாநில  அரசானது  வரையறுக்கப்பட்டுள்ள  செயல்பாடுகளை  மேற்கொள்ளும்  நோக்கத்திற்காக  வகுத்துரைக்கப்படும்  நடைமுறைகள்  மற்றும்  நிபந்தனைகளுக்கு உட்பட்டு  ஒரு  ஆணையத்தை  அமைக்க  வேண்டும்.

32.  குறை  தீர்ப்பு

1.  இந்தச்  சட்டத்தின்  கீழ்  ஒரு  குழந்தையின்  உரிமை  தொடர்பாக  எவருக்கேனும்  ஏதேனும்  குறை  இருக்குமானால்  அவர்  அதனை  அதிகார  எல்லைக்குட்பட்ட  உள்ளாட்சி  நிர்வாகத்திற்கு  எழுத்துப்பூர்வமான  புகாராக  அளிக்கலாம்.

2.  இந்தப்  புகாரைப்  பெற்றுக்  கொண்டபின்,  உள்ளாட்சி  நிர்வாகமானது,  சம்பந்தப்பட்டவர்  தரப்பு  வாதத்தைக்  கேட்பதற்கு  நியாயமான  வாய்ப்பு  வழங்கப்பட்ட  பின்பு  மூன்று  மாத  காலங்களுக்குள்  இதுகுறித்து  முடிவு  செய்யும்.

3.  உள்ளாட்சி  நிர்வாகத்தின்  முடிவால்  பாதிக்கப்படக்  கூடிய  எந்தவொரு  நபரும்  மாநில  குழந்தை  உரிமைகள்  பாதுகாப்பு  ஆணையத்திற்கு  மேல்  முறையீடு  செய்யலாம்.

4.  மேல்  முறையீடு  தொடர்பாக  மாநில  குழந்தை  உரிமைகள்  பாதுகாப்பு  ஆணையம்  அல்லது  ஏனைய  நிர்வாக  அமைப்புகள்  உரிய  முடிவினை  எடுக்கும்.

33.  தேசிய  ஆலோசனைக்  குழு  அமைத்தல்

1.  தொடக்கக்   கல்வித்  துறையிலும்  குழந்தை  மேம்பாட்டிலும்  அறிவும்  அனுபவமும்  உள்ள  நபர்களைத்  தெரிவுச்  செய்து  ஒரு  தேசிய  ஆலோசனைக்  குழுவை  அமைக்க  வேண்டும்.  இவர்கள்  எண்ணிக்கை  15 பேர்களுக்கு  மிகாமல்  இருக்க  வேண்டும்.

2.  சட்டத்தின்  விதிகளைப்  பயன்  விளைவிக்கும்  வகையில்  செயல்படுத்துவதற்கான  ஆலோசனைகளை  மத்திய  அரசாங்கத்திற்கு  வழங்குவதே  இக்குழுவின்  செயற்பாடாகும்.

3.  தேசிய  ஆலோசனைக்  குழு  உறுப்பினர்கள்  நியமனம்,  படிகள்  மற்றும்  இதர  நடைமுறைகள்  மற்றும்  நிபந்தனைகள்  ஆகியவை  வகுத்துரைக்கப்படும்  வகையில்  முடிவு  செய்யப்படும்.

34.  மாநில  ஆலோசனைக்  குழு

1.  மாநில  அரசு,  குழந்தை  மேம்பாட்டிலும்  அறிவும்  நடைமுறை  அனுபவம்  உள்ள   எண்ணிக்கையில்  15 பேர்  மிகாத  உறுப்பினர்களைக்  கொண்ட  ஒரு  மாநில  ஆலோசனைக்  குழுவை  அமைக்க  வேண்டும்.

2.  கல்வி  உரிமைச்  சட்டத்தின்  விதிகள்  முறையாக  செயற்படுத்துவதற்கான  ஆலோசனைகளை  மாநில  அரசுக்கு  வழங்குவதே  மாநில  ஆலோசனைக்  குழுவின்  செயற்பாடாகும்.

3.  இக்குழு  உறுப்பினர்களின்  நியமனம்,  படிகள்  மற்றும்  இதர  நடைமுறைகள்,   நிபந்தனைகள்  ஆகியவை  ஏற்கனவே  விதிக்கப்பட்ட  வகையில்  முடிவுச்  செய்யப்படும்.

அத்தியாயம் - 7

இதர  அம்சங்கள்

35.  ஆணைகள்  வெளியிடும்  அதிகாரம்

இந்தச்  சட்ட  விதிகளைச்  செயல்படுத்தும்  நோக்கத்திற்காக

1.  உரிய  அரசுகளுக்கு,  உள்ளாட்சி  அமைப்பிர்கு  உரிய   வழிகாட்டுதல்களை  மத்திய  அரசு  வழங்கலாம்.

2.  உள்ளாட்சி  நிர்வாகத்திற்கோ  அல்லது   பள்ளி  நிர்வாக  குழுவிற்கோ  உரிய  வழிகாட்டுதல்களையும்  ஆணைகளையும்  உரிய  அரசுகள்  வழங்கலாம்.

3  பள்ளி  நிர்வாக  குழுவிற்கு  உரிய  வழிகாட்டுதல்களையும்  ஆணைகளையும்  உள்ளாட்சி  அமைப்புகள்  வழங்கலாம்.

36.  வழக்கு  தொடுப்பதற்கான  முன்  அனுமதி

உரிய  அரசாங்கத்தால்  அதிகாரப்பூர்வ  அறிவிக்கையின்படி  அதன்  சார்பில்   செயல்பட  அதிகாரம்  அளிக்கப்பட்ட  ஒரு  அதிகாரியின்  முன்  அனுமதி  பெறாமல்  தண்டனைக்குரிய  எந்தவொரு  குற்றத்திற்காகவும்  வழக்கு  நடவடிக்கைகள்   மேற்கொள்ளப்  படமாட்டாது.

37.  நல்லெண்ணத்துடன்  எடுக்கப்படும்  நடவடிக்கைக்குப் பாதுகாப்பு

இந்தச்  சட்டத்தை  அல்லது  சட்ட  விதிகளைச்  செயல்படுத்தும்  நோக்கத்திற்காக  நல்ல  எண்ணத்துடன்  செய்யப்படுகிற  அல்லது  நல்ல  எண்ணத்துடன்  செய்வதற்கு  உத்தேசிக்கப்பட்ட  செயல்பாடுகள்  தொடர்பாக  மத்திய  அரசாங்கம்,  மாநில  அரசாங்கம்,  தேசிய  குழந்தை  உரிமைகள்  பாதுகாப்பு  ஆணையம்,  மாநில  குழந்தை  உரிமைகள்  பாதுகாப்பு  ஆணையம்  உள்ளாட்சி  நிர்வாகம்,  பள்ளி  நிர்வாகக்  குழு  அல்லது  எந்தவொரு  வழக்கு  அல்லது  சட்டப்பூர்வ  நடவடிக்கை  மேற்கொள்ளப்பட  மாட்டாது.

38.  சட்டவிதிகள்  பிறப்பிப்பதற்கு  அரசின்  அதிகாரம்

1.  இந்தச்  சட்ட  விதிகளைச்  செயல்படுத்துவதற்காக  அரசாங்கமானது  அதிகாரப்பூர்வ  அறிவிக்கையின்  மூலம்  தேவையான  விதிகளைப்  பிறப்பிக்க  வேண்டும்.

குறிப்பாகவும்,  தற்போது  நடைமுறையில்  உள்ள  பொதுவான   அதிகார  அமைப்புகளுக்கு  முரண்படாத  வகையில்  அனைவருக்குமான  விதிகள்  உருவாக்கப்பட  வேண்டும்.

நன்றி

மனித  உரிமைக்  கல்வி  நிறுவனம்

கோவை மாவட்டத்தில் தாய்த்தமிழ்ப்பள்ளிகள்

-கு.ந.தங்கராசு

“மெல்லத் தமிழ் இனி வாழும்” என்ற நம்பிக்கையைத் தமிழ் மண்ணில் விதைத்தவை தாய்த்தமிழ்ப் பள்ளிகள் !

“குழந்தை, அறிவாற்றலில் செழித்து உயர அனைத்துக் கல்வியும் தாய்மொழி மூலமே கற்றுத் தரப்பட வேண்டும். விளையாடி மகிழும் குழந்தையின் உணர்வைச் சிதைக்காமல், குழந்தைக்குக் கல்வியை ஊட்ட வேண்டும். ஆங்கிலத்தை ஒரு மொழியாகக் கற்பிக்கலாம். ஆனால், தாய்மொழியைக் கற்பிக்கும் முறை வேறு; அயல்மொழியைக் கற்பிக்கும் வேறு. கற்பித்தல் நெறிமுறைகளில் புதிய புதிய உத்திகளைக் கையாள வேண்டும்.”

ஆழமான கல்விப் பார்வையுடன், 1993இல் சென்னையை அடுத்த அம்பத்தூரில் முதல் தாய்த்தமிழ்ப் பள்ளி தொடங்கப்பட்டது. இன்று தமிழகத்தில் இருபதுக்கும் மேற்பட்ட தாய்த்தமிழ்ப் பள்ளிகள் சிறப்பாகச் செயல்பட்டுவருகின்றன.

கோவை மாவட்டத்தில் திருப்பூர், கோபி, உடுமலை, பொள்ளாச்சி, பல்லடம், சத்தி, சூலூர் முதலிய இடங்களில் தாய்த்தமிழ்ப் பள்ளிகள் செயல்பட்டுவருகின்றன.

திருப்பூர் தாய்த்தமிழ்ப்பள்ளிகள் ஆங்கிலவழிப் பள்ளிகளுக்கு இணையான அளவில் வளர்ச்சியடைந்துள்ளன.

தாய்த்தமிழ்ப் பள்ளிகளில் ப்ரீகேஜியை, ‘அரும்புகள்’ என்றும் எல்கேஜியை மொட்டுகள் என்றும் யுகேஜியை மலர்கல் என்றும் அழகுத்தமிழில் பெயரிட்டு அழைக்கின்றனர்.

எழுத்தர்களை உருவாக்கும் மெக்காலே கல்விமுறைக்கு இது ஒரு மாற்றுக்கல்வி முறையாக விளங்குகிறது. எழுத்தறிவித்தல், எண்ணறிவித்தல், சிந்தனையைத் தூண்டுதல், கலையுணர்ச்சியை வளர்த்தெடுத்தல், படைப்புத்திறனை வளர்த்தல், புத்தக வாசிப்பின்மேல் ஆர்வத்தை ஏற்படுத்துதல் எனப் பல கோணங்களில் கல்வித்திட்டம் உருவாக்கப்பட்டு நடை முறைப்படுத்தப்பட்டது.

ஒவ்வோர் ஆசிரியர்க்கும் ஒவ்வொரு குழந்தையும் செல்லக் குழந்தையாகத் திகழ்வதை இங்கே காண முடியும்.

குழந்தைகள் கல்வியில் மட்டுமின்றி, ஆடல் பாடல் கலைகளிலும் வல்லுநர்களாக வளர்கிறார்கள்.

குழந்தைக்கல்வி வல்லுநர் சலாலுதீன், தியாகு, நசன், தமிழ்க்குரிசில், ந.முத்துக்குமரன், கு.ந.தங்கராசு போன்றோர் பாடத்திட்டங்களையும் விளையாட்டு வழிக் கல்விமுறையையும் முதலில் வடிவமைத்துள்ளார்கள். இன்று அரசுப்பாடதிட்டமும், தாய்த்தமிழ்த் துணைப்பாடத்திட்டமும் இங்கே பின்பற்றப்படுகின்றன.

தாய்த்தமிழ்ப் பள்ளியென்றாலும், தமிழுடன் ஆங்கிலமும் கற்பிக்கப்படுகிறது. கற்பித்தல் முறை இங்கு மிக எளிமையாக உள்ளது. தாய்த்தமிழ்ப் பள்ளியில் நான்காம் வகுப்பு படிக்கும் ஒரு மாணவன், நான்காம் வகுப்பு ஆங்கிலப் புத்தகத்திலுள்ள அனைத்து ஆங்கிலச் சொற்களுக்கும் பொருள் தெரிந்துள்ளான். ஒவ்வொரு வகுப்பு ஆங்கிலப் பாடநூலில் உள்ள சொற்களை அகர வரிசையில் தொகுத்து, ஒரு தனி அகராதி (dictionary) யாக வெளியிட்டிருக்கிறார்கள். சிந்தனையை வளர்ப்பதையும் நினைவாற்றலை வளர்ப்பதையும் சீராகக் கொண்டு செல்கிறார்கள்.

இப்பள்ளிகளில் ஒரு வியப்பு, குழந்தைகளை ஆசிரியர்கள் மதிப்புச் சொற்களால் அழைக்கிறார்கள். பிரம்பையும் அட்யையும் இங்கு காணவே முடியாது. குழந்தைகள் எப்போதும் கைகட்டுவதில்லை. பார்வையிட வருவோர், பெரியவர்கல் யாரேனும் கைகட்டி நின்றால், குழந்தைகள் “கைகளைக் கட்டாதீர்கள்” என்று ஒரே குரலில் வேண்டுகிறார்கள். பெரியவர்களைப் பார்க்கும்போது, “காலை வணக்கம். வெற்றி உறுதி” என்று சொல்லி வியக்க வைக்கிறார்கள்.

அறிஞர்களின், தேசங்களின் வரலாறு நயம்படக் கற்பிக்கப்படுவதால், தாய்த்தமிழ்ப் பள்ளிக் குழந்தைகள் வரலாற்றுணர்வு நிரம்பியவர்களாக உள்ளனர்.

மண்ணின் மீது நேசம், மக்கள் மீது நேசம், இயற்கைச் செல்வங்கள் மீது நேசம், மொழியின் மீது சேசம், சொந்தப் பண்பாட்டின்மீது நேசம், குழந்தைகள் உள்ளங்களில் ஆழப்பதியவைக்கப்படுவதால், இங்கு பயிலும் குழந்தைகள் பண்பாடுமிக்கவர்களாக வளர்கிறார்கள். அதே சமயம் மன உறுதியும் துணிவும் உள்ளவர்கள் பெறுவதற்கான பயிற்சிகளும் இங்கே அளிக்கப்படுகின்றன.

காலத்துக்கேற்ப, அடிப்படைக் கணினிக் கல்வி, கணினிப் பயன்பாடு முதலியனவும் கற்பிக்கப்படுகின்றன.

தமிழாக இருப்பினும், ஆங்கிலமாக இருப்பினும் பிழையின்றிக் கற்பிக்கிறார்கள்; பிழையற மாணவர்கள் கற்றுக் கொள்கிறார்கள். தூய்மை, நேரந்தவறாமை, ஒழுங்கு, நட்புணர்வு எல்லாவற்றையும் இங்கே குழந்தைகள் “கல்விக் கூடமல்ல; கலைக்கூடம்” என அறிஞர்கள் பலரும் பாராட்டிச் செல்கிறார்கள்.

நெஞ்சு நிமிர நிற்கும் பிஞ்சுக் குழந்தைகளின் பின்வரும் முழக்கம் நம்மைச் சிலிர்க்க வைக்கிறது.

. அன்னை மொழியில் அனைத்தும் கற்போம் !
. வேண்டிய மொழியை விரைந்து கற்போம் !
. அறிவியல் உலகை அறிவால் வெல்வோம் !

திருப்பூரில் நூற்றாண்டு கடந்த பள்ளி

-கவிஞர் சிவதாசன்
திருப்பூர் வரலாற்று ஆய்வு மையம்

செம்மொழியான தமிழ்மொழியின் வளர்ச்சிக்கு தமிழர்கள் மட்டுமல்லாது மாற்று மொழியினரும் வேற்று நாட்டினரும் அரும்பணி ஆற்றியுள்ளனர். இவர்களில் கிறிஸ்துவர்களின் பங்கு சிறப்பாகக் குறிப்பிடத்தக்கது.

தமிழில் முதன்முதலில் அகராதி தொகுத்தவர் பெஸ்கி என்கிற வீரமாமுனிவர். தமிழில் முதன்முதலில் அச்சுக்கலையை அறிமுகப்படுத்தியவர் சீகன் பால்கு. முதன்முதலில் திருக்குறளை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்தவர் எல்லிதுரை. திராவிட மொழிகளின் ஒப்பிலக்கணம் கண்டவர் கால்டுவெல். முதன்முதல் திருவாசகத்தை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்தவர் வி.யு.போப். இவர்கள் அனைவரும் கிறிஸ்துவகளாகவும், வெளிநாட்டினராகவும் இருந்தாலும் தமிழ்மொழிக்கு மேற்கூறியவாறு ஆற்றிய பணி அரும்பணியாகும். மேலும் இதுபோன்றவர்கள் இன்றுவரையிலும் கல்விப்பணியையும் ஆற்றி வருவதும் குறிப்பிடத்தக்கது. அவ்வகையில் இவ்வகையினர் திருப்பூரில் ஆற்றி வரும் கல்விப்பணி கல்விப்பணி இங்கு காண்போம்.

உலகளாவிய அளவில் கிறிஸ்துவ மதத்தில் இருபெரும்பிரிவுகள் உள்ளன. ஆதியில் தோன்றிய கத்தோலிக்கக் கிறிஸ்துவப் பிரிவை எதிர்த்து சீர்திருத்த எழுந்த இயக்கம் புராட்டஸ்ட்டண்ட் ஆகும். இதனை, ஏற்படுத்தியவர் மார்ட்டின் லுத்தர் என்ற ஜெர்மானியர் ஆவார். இவரது வழியொற்றி தமிழகத்தில் தோன்றியதே T.E.L.C என்கிற தமிழ் சுவிசேச லுத்தரன் திருச்சபை ஆகும். 1700களின் துவக்கத்தில் ஜெர்மனியிலிருந்து தமிழகத்தின் தரங்கம்பாடி கடற்கரையில் வந்திறங்கியவர் ‘சீகன்பால்கு’ ஆவார். இவரே முதன் முதைல் நம் நாட்டில் அச்சு இயந்திரம் நிறுவி, முதன்முதலில் பைபிலின் புதிய ஏற்பாட்டை தமிழில் பதிப்பித்தவர்.

இவர் தரங்கம்பாடியில் சேவையாற்றிய T.E.L.C திருச்சபை அமைப்பு திருச்சிக்கு இடம் மாறி ‘தரங்கைவாசம்’ என்ற பெயரில் தமிழகத்தின் தலைமை அமைப்பாக இயங்கி வருகிறது. தமிழகத்தில் அனைத்து ஊர்களிலும் இதற்கு கிளைகள் உள்ளன. இதன் கிளை அமைப்பு ஒன்று அக்காலத்தில் திருப்பூரில் 1885ல் தோற்றுவிக்கப்பட்டது. திருப்பூரில் நொய்யலின் தென் கரையில் இத்திருச்சபை ஆரம்பிக்கப்பட்ட வீதிக்கு மிசன் வீதி என்றே பெயரானது.

ஆதியில் காலங்காலமாக நாட்டில் குருகுலக் கல்வி முறையே இருந்து வந்தது. பின்னர் அது திண்ணைப்பள்ளி, ஓராசிரியர் பள்ளி என்றவாறு மாறியது. நம் நாட்டில் ஆங்கிலேயர் காலத்தில் தான் முறையான பள்ளிக்கூடங்கள் தோன்றின. அவ்வகையில் 1885ல் திருப்பூரில் மிசன் வீதியில் இத்திருச்சபை 28.2.1912ல் T.E.L.C எனும் பெயரில் ஒரு ஆரம்பப் பாடசாலையை ஏற்படுத்தியது. இப்பள்ளியே திருப்பூரில் தோன்றிய முறையான முதற்பள்ளி ஆகும்.

அன்புள்ள ஆசிரியருக்கு ஆபிரகாம்லிங்கன்

(ஆபிரகாம்லிங்கன் தனது மகனைப் பள்ளிக்கு அனுப்பிய போது ஆசிரியருக்கு எழுதியது)

அன்புள்ள ஆசிரியருக்கு,

எனது மகன் இன்று தன் பள்ளிப் படிப்படித் தொடங்குகிறான். கொஞ்ச காலத்திற்கு அவனது பள்ளிப்படிப்பு அவனுக்குப் புதிராக இருக்கப்போகிறது. ஆதலால் அவனைப் பரிவோடு நடத்துவீர்கள் என நம்புகிறேன்.

எல்லா மனிதர்களும் நீதியானவர்களல்ல. நேர்மையானவர்களல்ல என்ற உண்மையையும், ஒவ்வொரு கயவனும் ஒரு வீரனை முன்மாதிரியாய்க் கொண்டுள்ளான் என்றும் ஒவ்வொரு ஒழுங்கு கெட்ட அரசியல்வாதியும் ஒரு தன்னலமற்ற தலைவனை முன்மாதிரியாகக் கொண்டுள்ளான் என்பதையும், ஒவ்வொரு பகைவனுக்கும் கூட ஒரு நண்பன் இருக்கிறான் என்ற உண்மையைக் கற்றுக் கொடுங்கள்.

பொறாமைப் படுவதிலிருந்து அவனைத் திசை திருப்புங்கள். முடிந்தால் அமைதியாக தனக்குள்ளேயே சிரித்துக் கொள்வதன் இரகசியத்தையும் வலிமையற்றவர்களைக் கொடுமைப்படுத்தி அவர்கள் மீது வெற்றி கொண்டு விட்டோம் என எண்ணுபவர்களே உண்மையில் தோல்வியைத் தழுவுகிறார்கள் என்பதையும், முடிந்தால் புத்தகம் படிப்பதன் அவசியத்தையும், வானத்துப் பறவைகள் பற்றிய புரிந்து கொள்ள முடியா உண்மைகளைப் பற்றியும், இயற்கை எழில் பொங்கும் பச்சை மலைகளின் மீது வளர்ந்துள்ள வண்ண மலர்களைப் பற்றியும் ஆழமாக தியானிக்கக் கற்றுக் கொடுங்கள்.

ஏமாற்றுவதைவிட தோல்வியடைவது எவ்வளவோ மேன்மையானது என்பதையும், எல்லாரும் தவறு என்று சொல்லும்போதும் தன்னுள்ளத்தில் இயல்பாக எழும் சிந்தகைள் மீது உறுதியான நம்பிக்கையும், எளியோரிடம் எளிமையாகவும், பரிவோடும், வலியோருடன் வன்மையாகவும் இருக்க அவனுக்கும் கற்றுத் தாருங்கள்.

எல்லோரும் செய்வது போல் கூட்டத்தைப் பின்பற்றாமலிருக்கத் தேவையான வலிமையையும், எல்லோரும் சொல்வதைக் கேட்கவும் ஆனால் கேட்பதை உண்மை என்ற சல்லடையில் வடிகட்டி நல்லதை மட்டும் எடுத்துக் கொள்ளவும் கற்றுக் கொடுங்கள்.

முடிந்தால் தான் வருத்தமாக இருக்கும் போதும் எப்படி சிரித்துக் கொள்வது எனவும், அழுவதில் வெட்கப்பட எதுவும் இல்லை என்பதையும், தோல்வியிலும் மகத்துவமுள்ளது, வெற்றியிலும் துயரமுள்ளது என்பதையும், எப்போதும் குறைகூறிக் கொண்டே இருப்பவர்களை ஏளனப்படுத்தவும் கற்றுக் கொடுங்கள்.

அவனது திறமைகளை அதிக விலைக்கு விற்கவும் அதே நேரத்தில் அவனது இதயத்துக்கும் ஆன்மாவுக்கும் விலை நிர்ணயிக்காமலிருக்கவும், ஊளையிடும் கூட்டத்தின் முன் தன் காதுகளை மூடிக்கொள்ளவும், தான் செய்வது சரி என்று பட்டால் அவர்களை எதிர்த்து நின்று மோதவும் கற்றுக் கொடுங்கள்.

பொறுமையிழந்து துடிப்பாக வாழத் தேவையான துணிவை அவன் பெறட்டும் எப்போதும் தன்மீது நம்பிக்கை கொள்ளக் கற்றுக் கொடுங்கள். அப்போதுதான் அவன் மனித குலத்தின் மீதும் கடவுளின் மீதும் மேலான நம்பிக்கை கொண்டிருப்பான். இது ஒரு மிகப்பெரிய கட்டளை. ஆனால் உங்களால் இயன்றதைச் செய்யுங்கள். அவன் மிகவும் நல்ல சிறுவன். அவன் என் மகன்.

கோவை மாவட்டக் கல்வி வரலாறு

-புலவர் செந்தலை ந.கவுதமன்

கோவை
மாவட்டத்தின் வளர்ச்சியும் சிறப்பும், இருநூறு ஆண்டுகளுக்குள் ஏற்பட்டவைதாம். கடின உழைப்பும், புதியன தேடும் விழிப்பும் அடுத்தடுத்த படிக்கட்டுகளை உருவாக்கி, இம்மாவட்டத்தை உயரே உயரே ஏந்திச்சென்றன.

கல்வியும் மிக்கதாம் செல்வமொன்று இல்லையே!’ எனும் பாவேந்தர் பாரதிதாசன் கருத்திற்கேற்ப புத்தகக் கல்வி, பட்டறிவுக் கல்வி எனும் இரட்டைத் தண்டவாளங்களைக் கோவை மக்கள் இயல்பாய் அமைத்துக் கொண்டனர். அதனால் வளர்ச்சித் திசையில் வேகம் காட்டுவது இம்மாவட்டத்திற்கு எளிதாய்ப் போனது.

வேரும் கனியும்

பழைய வரலாற்று வேர்கள் பாதுகாக்கப்பட்டால் மட்டுமே, புதிய வரலாற்றுக் கனிகளைப் பெற முடியும்.

ஒவ்வொரு துறைக்கும் உரிய காலத்தே பதிவு செய்வதும், அவற்றை உலகின் கைகளில் ஒப்படைப்பதும் முதன்மையானது அறிவுப்பணி.

கோவை மாவட்டத்தில் கல்வித்துறை பதித்த வரலாற்றுச் சுவடுகள், திசைமாறாத பயணத்திற்குத் தெளிவான வழியைக் காட்டும்.

அன்றைய திண்ணைப்பள்ளிகள்

தொடக்ககாலப் பள்ளிகள் அனைத்தும் கோவிலின் ஒருபகுதியாகவே இயங்கி வந்தன. எல்லா மக்களுக்கும் சமமாய்க் கல்வி வழங்க மறுத்த அவலம், ஆயிரம் ஆண்டுகளுக்கு மேல் ஆட்சி செலுத்திய நாடு இது.

கல்வி மறுக்கப்பட்டவர்கள், படிப்பு பெறும் வாய்ப்பை வழங்கிய திண்ணைப்பள்ளிகள் 1822க்குப் பின்பே தமிழகத்தில் வளர்ச்சி பெற்றன. அவையும் கோவிலைச் சார்ந்தே இயங்கி வந்தன.

கல்வி முயற்சிகள் அனைத்தும் அந்தந்த ஊர் மக்களால் மட்டுமே மேற்கொள்ளப்பட்டன. இதில் அரசு எந்தப் பொறுப்பும் ஏற்கவில்லை.

மாவட்ட, வட்டக்கல்வி நிறுவனங்கள் என்ற அளவில் 1822இல் அரசு முயற்சி எடுத்து, பயிற்றுமுறைச் சங்கம் என்ற அமைப்பை ஏற்படுத்தியது. மாவட்டத்திற்கு இருவர் எனப் பயிற்சியாளர்கள் அங்கு அமர்த்தப்பட்டனர். அவர்கள் வழியாகத் திண்ணைப்பள்ளி ஆசிரியர்கள் உருவாக்கப்பட்டனர்.

மாவட்ட நிறுவனத்தில் ஆசிரியப் பயிற்சிபெற உரூபா பதினைந்தும், வட்ட (தாலூகா) நிறுவனத்தில் பயிற்சிபெற உரூபா ஒன்பதும் மாத உதவித் தொகையாக வழங்கப்பட்டன.

மாணவர் விரும்பித் தருவதைத் தவிர, கட்டாயப்படுத்திக் கட்டணம் பெறக்கூடாது எனத் திண்ணைப்பள்ளி ஆசிரியர்களுக்கு ஆங்கிலேய அரசு விதிவகுத்தது.

திண்ணைப்பள்ளி ஆசிரியர்களை உருவாக்கும் முயற்சியை 1931 ஆம் ஆண்டிற்குப்பின் அரசு குறைத்துக்கொண்டது.

கோவையில் திண்ணைக்கல்வி

திண்ணைப்பள்ளியில் படித்தோரின் கல்வித் திறன் பற்றிக் கோவை மாவட்ட ஆட்சியர் 1834இல் எழுதியுள்ள குறிப்பு இது.

பள்ளிக்கூடத்தில் ஐம்பது சதவீத மாணவர்கள்
மாத்திரமே படிக்கவும் எழுதவும்
தமிழ்க்கணக்கு வைக்கவும்
சாமர்த்தியம் அடைந்திருந்தனர்
(ஜில்லா சரித்திரம் - கோயம்புத்தூர், 1927. பக்கம் - 10)

இலண்டன் மிசன் பாதிரிமார்கள் 1831இல் ஆறு தொடக்கப் பள்ளிகளைக் கோவை மாவட்டத்தில் முதன்முதலாகத் தொடங்கினர். 1850இல் பதினான்கு பள்ளிகளைத் தொடங்கினர். (விரிவான செய்திக்கு 1831ஆம் ஆண்டு பள்ளி வரலாறு காண்க).

கோவை மாவட்ட ஆட்சியர் தாமசு முயற்சியால் 1852இல் உருவானபிராஞ்சு ஸ்கூல்தொடக்கப் பள்ளியாகத் தொடங்கி, கோவை அரசு கலைக்கல்லூரியாகப் பின்னர் வளர்ச்சி பெற்றது.
(விளக்கம் : 1852ஆம் ஆண்டு பள்ளிச் செய்தது.)

மக்களின் துணையோடு மட்டுமே வளர்ந்த அன்றைய பள்ளிகள், 1871ஆம் ஆண்டிற்குப் பின்பே அரசின் உதவியையும் வழிகாட்டுதலையும் பெறத்தொடங்கின.

அன்றைய கோவை மாவட்டத்தில் 841 திண்ணைப் பள்ளிகள் இருந்தன. அவற்றில் பன்னிரண்டு மட்டுமே அரசால் பள்ளிகளால் ஏற்கப்பட்டன.

ஆசிரியர்களுக்குப் பயிற்சிதரும் நிறுவனங்களைச் சேவூர், காங்கயம், சூலூர் முதலிய ஊர்களில் நிறுவிய ஆங்கிலேய அரசு பின்னர் அவற்றைக் கைவிட்டு விட்டது.

கோவையின் கல்விவேர்கள்

1927இல் கோவையில் இருந்த கல்வி நிறுவனங்கள் இவை :

1. உயர்நிலைப்பள்ளிகள் - மூன்று (சி.எஸ்., மைக்கேல், சர்வஜனபள்ளி)

2. மகளிர் ஆசிரியர் பயிற்சி நிறுவனம் இணைந்த பெண்கள் மேல்நிலைப்பள்ளி - ஒன்று (இராசவீதி மகளிர் பள்ளி).

3. ஆண்கள் ஆசிரியப் பயிற்சி நிறுவனம் - ஒன்று (இப்போது மகளிர் கல்வியியல் கல்லூரியாகிவிட்டது.)

4. இடைநிலைக்கல்லூரி - ஒன்று ( கோவை அரசுக் கலைக்கல்லூரியில் பட்ட வகுப்புகள் 1946 வரை வரவில்லை. (இண்டர் மீடியட. வகுப்புகள் மட்டுமே இருந்தன).

5. வேளாண்மைக் கல்லூரி - ஒன்று

6. வனவியல் கல்லூரி - ஒன்று.

இந்தக் கல்வி நிறுவனங்களே, கோவையின் பலமுனை வளர்ச்சிக்கு ஆணிவேராக அமைந்தவை. இவை கோவை மண்ணில் வேர் பிடிப்பதற்குக் காரணமான சமுதாய, வரலாற்றுச் சூழல் - வியப்பும் திகைப்பும் தருவது.

சங்ககாலமும் இடைக்காலமும்

பிறரிடம் கையேந்தி உதவி பெற்றாவது படிக்குமாறு, சங்ககாலத்தில் கல்வியின் தேவை வலியுறுத்தப்பட்டது.

சமூகத்தின் எல்லாத் தரப்பினரும் படிக்கின்ற சமவாய்ப்பும் சம உரிமையும் அப்போது இருந்தன. ஆணும் பெண்ணும் சமமாய்க் கல்வி பெறும் வாய்ப்பைச் சங்ககாலச் சமுதாயம் வழங்கியிருந்தது.

இடைக்காலத்தில் இந்நிலை மாற்றப்பட்டு விட்டது. தொழில் வழிப் பிரிவுகளாயிருந்தவை, பிறவி வழிச் சாதிகளாக்கப்பட்டன. நால்வரணப் பாகுபாடும் சாதிவழி ஏற்றத் தாழ்வும் உருவாக்கப்பட்டன. தீண்டாமை, அண்டாமை, பாராமை முதலிய சமூகக் கொடுமைகள் தலைதூக்கின. அரசின் சட்டமாகவும் அவை ஏற்கப்பட்டன.

உயர் சாதியினருக்கு மட்டுமே படிப்பு எனும்குருகுலக் கல்வி முறைதோற்றுவிக்கப்பட்டது. பன்னிரண்டு ஆண்டு படிக்கும் விரிவான குருகுலக் கல்வியில் உயர்சாதியினர் மட்டுமே அனுமதிக்கப்பட்டனர்.

உழைக்கும் மக்களின் கல்வித் தாகத்தைத் தீர்க்கத் திண்ணைப்பள்ளிகள் தோன்றின. திண்ணைப்பள்ளிப் படிப்பு வெறும் இரண்டாண்டுகளே ! ஆங்கிலேயர் காலத்தில்தான் அது தொடக்கப் பள்ளியாக்கபப்ட்டு நான்காண்டானது. பின்பு ஐந்தாண்டாக விரிந்தது.

எண்ணும் எழுத்தும் அறிமுகமான நிலையில், சாதிவழித் தொழில்களை மட்டுமேகண்ணாகப் பேணுமாறு மக்கள் கட்டாயப் படுத்தப்பட்ட காலம் இருந்தது.

’பள்ளி’ வந்தது

அனைவருக்கும் படிப்பு வழங்கும் முயற்சியைப் புத்தமதமும் சமணமதமும் மேற்கொண்டன. சமணர்களின் பாடசாலைகள் இருந்த ஊர்களின் பெயரில்பள்ளிஎன்பது இருக்கும்.

பீடம்பள்ளி, பதுவம் பள்ளி, திருச்சிராப்பள்ளி, திருக்காட்டுப்பள்ளி எனத் தொடரும் இன்றைய ஊர்கள் ஒருகாலத்தில் சமணப்பள்ளி இருந்த ஊர்கள் ! இன்றையபள்ளிக் கூடமும் அந்த வரலாற்றின் அடித்தளத்தில் முளைத்த சொல்லே ஆகும்.

தொடர்ந்து வந்த இசுலாமும் கிறித்தவமும் கல்வி விளக்கை அனைவரின் கைகளுக்கும் வழங்க எடுத்த முயற்சிகள், ஓர் எல்லையோடு நின்றுவிட்டன.

முறையான கல்வி

ஆங்கிலேயர் ஆட்சி உருவானபின் திண்ணைப்பள்ளிகள் முறைப்படுத்திவிட்டன. ‘அறிவரி வகுப்பு’ (அகரவரி) என ஒன்றும், அதையடுத்து நான்கு வகுப்புகளும் திண்ணைப் பள்ளி வகுப்புகளாயின. பின்னர் அவையே தொடக்கப்பள்ளிக் கல்வியாக வடிவம் பெற்றன. அறிவரி வகுப்புகூடசின்ன அறிவரி’ ‘பெரிய அறிவரிஎன (இன்றைய LKG, UKG போல) முதல்வகுப்பிற்கு முன்னர்இரட்டை வகுப்புகளாகக் கற்பிக்கப்பட்டன. அறிவரிவகுப்பு, மக்கள் நாவலில்அறிவிலி வகுப்புஎன மாறியதும் உண்டு.

முறையான பள்ளியமைப்பு உருவாகி, பாடத்திட்டங்களும் கல்வி அமைப்புகளும் அடுத்தடுத்து உருவாக்கப்பட்டுக் கல்வித்துறை முறைப்படுத்தப்பட்டது.

இடைநிலைக்கல்வி (இண்டர் மீடியட்) பட்டக்கல்வி என வகைப்படுத்தப்பட்ட கல்லூரிக் கல்வி தொடர்ந்து அறிமுகமானது.

தமிழகம் தந்த சமூகநீதி

பள்ளி, கல்லூரி, பல்கலைக்கழகம் என ஒழுங்கு படுத்தப்பட்ட கல்வியால் சமுதாயம் புதிய முகத்தைப் பெற்றது. உயர்ந்த மதிப்பெண் உள்ளவர்களுக்கு மட்டுமே உயர்கல்வியிலும் அரசுப்பணியிலும் இடம் கிடைக்கும் என்ற நிலை ஏற்படுத்தப்பட்டபோது, பொது மக்களிடம் புதிய விழிப்பு தலைதூக்கியது.

தலைமுறை தலைமுறையாய்ப் படித்த சமூகத்தினர் அதிக மதிப்பெண் பெறுவது இயற்கை ! படிக்கும் வாய்ப்பு பல தலைமுறையாய் மறுக்கப்பட்டு, கல்வி வெளிச்சத்தைப் புதிதாய்க் கண்கூசிப் பார்க்கும் சமூகத்தின் அடித்தட்டு மாணவர்களிடம் அதே மதிப்பெண்ணை எப்படி எதிர்பார்க்க முடியும்?

சமூகத்தின் எல்லாத் தரப்பினருக்கும் படிப்பையும் பணிவாய்ப்பையும் அவரவர் எண்ணிக்கை விழுக்காட்டிற்கேற்ப வழங்கக்கோரும் சமூக நீதிக்குரலைத் தமிழகம் எழுப்பியது.

தாழ்த்தப்பட்டோர், மிகப்பிற்படுத்தப்பட்டோர், பிற்படுத்தப்பட்டோர் என ஒடுக்குமுறைப் பாதிப்பின் அளவிற்கேற்ப ஒடுக்கப்பட்டோருக்கு உரிய விகிதத்தை வழங்கும்வகுப்புவாரி இட ஒதுக்கீடுநடைமுறைக்கு வந்தது.

திராவிடர் இயக்கம் எழுப்பிய சமூக நீதிக் குரலின் நியாயத்தை எல்லா இயக்கங்களும் ஒப்புக் கொள்ளும் நிலை இயல்பாக உருவாகிவிட்டது. இந்தியத் துணைக்கண்டம் முழுவதும் இன்று சமூகநீதிக் குரலின் வழிநடக்கும் சூழல் தோன்றிவிட்டது. நடுவணரசுத் துறைகளில் சமூகத்தின் எல்லாத் தரப்பினரும் பங்குபெறும் சட்ட பூர்வ நிலை இப்போதுதான் அரும்பியுள்ளது.

'எசமானேஎனக் கைகட்டி நின்ற உழைக்கும் மக்கள், இன்று அதிகார இருக்கையில் அமரும் வாய்ப்பையும் சமூகத்தகுதியையும் பெறுவதற்குக் காரணமானது கல்வியே !

திண்ணைப்பள்ளிக் கல்வி

கல்வியறிவு பெற்றதால், அரசுப் பதவிகளில் இடம் பெற்ற முதல் தலைமுறையினர், படிப்பின் சுவையைப் பார்த்தது திண்ணைப்பள்ளி வழியாகத்தான் !

அன்றைய திண்ணைப்பள்ளி நடைமுறைகள் இன்றைய தலைமுறையினர்க்கு நம்ப முடியாத செய்திகளாய்த் தோன்றும்.

திண்ணைப்பள்ளி என்பது ஆசிரியர் வீட்டுத் திண்ணையில்தான் நடக்கும். ‘எல்லோருக்கும் கல்விஎன்பது மறுக்கப்பட்ட இடைக்காலத்தில் கல்வி கற்பதற்குத் திண்ணைப் பள்ளியையே அடித்தட்டு மக்கள் நம்பியிருந்தனர்.

திண்ணை இருபிரிவாய் இருக்கும். கீழ் வகுப்புக் குழந்தைகள் ஒருபுறம். மேல் வகுப்புக் குழந்தைகள் மறுபுறம்.

பள்ளியில் ஏழு வயதில் சேர்ப்பதே அந்தநாள் வழக்கம் ! பின்னர் அது ஐந்து வயதாய்க் குறைக்கிறது.

அண்மைக் காலம் வரை, பள்ளியில் சேரும் குழந்தையிடம் வயது கேட்க மாட்டார்கள். கேட்டாலும், பெற்றோருக்குச் சொல்லத் தெரியாது.

தலைக்குப் பின்புறமாகக் கையை வைத்துக் காதையோ மூக்கையோ தொடுமாறு ஆசிரியர் சொல்வார். மாணவர் வயதை இப்படி அறிவதே நெடுநாள் வழக்கம். 1965ஆம் ஆண்டுவரை கூட, தமிழகப் பள்ளிகள் இந்த நடைமுறை வந்தது.

முறையான கல்வி கற்பிக்கும் பள்ளிகள் 1930க்கு முன்பு கோவையில் இல்லை. விருப்பமுள்ள்ள ஆசிரியர்கள், விரும்பிய ஊரில் வீடுபிடித்துத் தங்குவார்கள். வீட்டுத் திண்ணையைப் பள்ளியாக்கி விடுவார்கள்.

ஆண்,பெண் வேறுபாடின்றி அனைவரும் வண்ணநூல் வைத்துத் தலையில் சடைபின்னிப் பள்ளியில் அமர்ந்திருக்கும் காட்சி 1965 வரை பள்ளிகளில் இருந்தது.

தொடக்கக் காட்சி

திண்ணைப்பள்ளி வகுப்புகள் விடியற் காலையிலேயே தொடங்கிவிடும். பிரம்படிக்குப் பயந்து ஒவ்வொருவரும் வகுப்புக்கு முந்திவருவதில் போட்டி போடுவார்கள்.

பள்ளிக்கு முதலில் வரும் மாணவனுக்குவேத்தான்’ (வேற்றான் - தனிப் பெருமையுடையவன் )என்று பெயர். இந்தப் பெருமையைப் பெறுவதற்காக நள்ளிரவில் வந்துவிடும் மாணவர்களும் உண்டு.

இன்றைக்குவேத்தான்யாரு?” என ஆசிரியர் வினவும் போது, எழுந்து நிற்கும் மகிழ்ச்சியைப் பெறுவதற்காக மாணவர்களுக்குள் அன்றாடம் போட்டி நடக்கும்.

தனக்குப்பின் பள்ளிக்கு வரும் மாணவர் பெயர்களை வரிசைப்படி எழுதிவைக்க வேண்டியது, முதலில் வந்த மாணவனின் கடமை.

மாணவர்கள் வந்த தாமத வரிசைக்கேற்ப, ஆசிரியர் பிரம்படி வழங்குவார். அவரின் பிரம்பு, முதல் பையன் கையைத் தடவுவதோடு நின்றுவிடும். அடுத்து நிற்பவன் கையில் அடி மெல்ல விழும். அடுத்தடுத்து நிற்பவர்குக்கோ பிரம்படியின் வேகம் கூடிக்கொண்டே செல்லும்.

வகுப்பு தொடங்குவதற்கு அடையாளமாக மாணவர்கள் சேர்ந்து பாடும் பாடலும் உண்டு.

காலமே எழுந்தி ருந்து
கால்முகம் சுத்தி செய்து
கோலமாய் நீறு பூசிக்
குழந்தைகள் பசிகள் தீரப்
பாடமும் படித்தோம் அய்யா
பகர்அடி பட்டுக் கொண்டோம்
சீடரை அனுப்பும் அய்யா
திருவடி சரணம் தானே !”

மணலில் எழுத்து

காலை வணக்கப் பாடல் முடிந்ததும், ஆசிரியரின் பிரம்பைச் சட்டாம்பிள்ளை வெளியில் எடுத்து வந்து வைப்பான். வீட்டிலோ ஆற்றிலோ எடுத்துவந்த மணலை மாணவர்கள் தங்கள்முன் சமமாய்ப் பரப்புவார்கள். சம்மணமிட்டு அமர்ந்த நிலையில் மணலின் மீது ஒவ்வோர் எழுத்தையும்ஆனா, ஆவன்னாஎன இராகம் போட்டபடி சுட்டு விரலால் எழுதத் தொடங்குவார்கள். விரல் தேய்த்து சிலருக்கு இரத்தம் வந்துவிடும். இரத்தம் வராதிருக்க, கழற்சிக்காய் ஓட்டினை விரலில் செருகியபடி மணலில் எழுதும் வழக்கமும் இருந்தது.

கீழ்வகுப்பு மாணவர்களுக்கு எழுத்துப் பயிற்சி நடக்கும்பொழுது, மேல்வகுப்பு மாணவர்கள் ஏட்டுச் சுவடியைப் பிரித்து வைத்து இராகம் போட்டுப் படிக்கத் தொடங்குகிறார்கள்.

மணலில் எழுதிப் பழகியமுறை, கைப்பலகை (சிலேட்டு) வந்ததும் மறைந்துவிட்டது. காகிதப் புத்தகம், தூவல் (பேனா) அறிமுகமாகும் வரை ஓலைச்சுவடியும் எழுத்தாணியுமே இங்கு எழுது பொருள்களாய் இருந்தன.

சுவடித்தூக்கும் - தூக்குத் தூக்கியும்

எழுத்துப் பயிற்சி வந்த மாணவர்களுக்கு கீழ்வாய் இலக்கம், மேல்வாய் இலக்கம், நெல் இலக்கம், குழிமாற்று முதலிய கணக்குவகை கற்பிக்கப்படும் நிகண்டு, நெடுங்கணக்கு, நிதி நூல்கள், அந்தாதிகள், கலம்பங்கள், சதகங்கள், பிள்ளைத்தமிழ் நூல்கள் முதலியவற்றையும் ஆசிரியர் கற்பிப்பார்.

வீட்டிலிருந்து கிளம்பும் மாணவர்கள் சுவடித்தூக்குடன் புறப்படுவார்கள். சுவடிகளை அடுக்கி வைத்துத் தூக்கிச் செல்லும் கயிறு சேர்ந்த பலகையின் பெயர்சுவடித் தூக்கு’.

வசதியான வீட்டுப்பிள்ளைகள், சுவடித் தூக்கைச் சுமப்பதற்கு வேலையாள் வைத்திருப்பர். அவருக்குப் பெயர்தூக்குத் தூக்கி’. இந்தப் பெயரில் வந்த திரைப்படம் கூட உண்டு.

சுவடித் தூக்குஒருவகை உறிபோல இருக்கும். திண்ணைப்பள்ளி ஆணியில் வரிசையாய் மாணவர்கள் மாட்டி வைத்திருப்பார்கள்.

சுவடிக்காலச் சுவடுகள்

அரிச்சுவடி, எண்சுவடி முதலிய பெயர்கள் அந்தக்கால ஓலைச்சுவடி முறையை இன்றும் நினைவூட்டுபவை.

திண்ணைப் பள்ளிக் கல்வியில் முக்கியமான ஒன்று, ஓலைச் சுவடிகளைப் பராமரிக்கக் கற்றுக் கொள்வது !

பனை ஓலைகளைக் கத்தரிக்கவும் சுவடி சேர்க்கவும், எழுதத் தாணியால் அவற்றில் எழுதவும் கற்றுத் தருவார் ஆசிரியர்.

சுவடியைப் பிரிப்பதற்கும் சேர்த்துக் கட்டுவதற்கும் மிகுந்த பயிற்சி வேண்டும்.

ஓலையை நறுக்கிச் சீராய்த் துவாரம் அமைத்து, அதில் நூற்கயிற்றைச் செருகிக் கட்ட வேண்டும். நூல் உருவிவராமல் இருப்பதற்கு அடிப்பகுதியில் ஓலைச்சுருளோ பொத்தானோ ஓட்டைக் காலணாவோ சோளியோ வைத்துக்கிளி மூக்குகட்ட வேண்டும்.

ஏடுகளின் தொடக்கத்திலும் இறுதியிலும் வெற்றேடுகள் சிலவும் (எழுதப்படாமல்) இணைக்க வேண்டும்.

ஆசிரியர் கையெழுத்தில் அமைந்த மூல ஓலையின் பெயர்சட்டம்’. அந்த ஓலையில் உள்ளது போன்றே மாணவர்கள் எழுதி எழுதிப் பழகுவார்கள்.

எழுத.... எழுத....

எழுத உதவும் எழுத்தாணியிலும் பலவகை இருந்தது. வார் எழுத்தாணி, மடக்கு எழுத்தாணி, குண்டு எழுத்தாணி என வசதிக்கேற்ப வைத்திருப்பார்கள்.

பனையோலையால் உறை செய்து மூடி போட்டிருப்பது வார் எழுத்தாணி.

மடக்கிக் கொள்ளும் வசதியுடன் இருப்பது மடக்கு எழுத்தாணி.

எழுத்தாணிக்குப் பின் காகிதம் வந்தபோது அறிமுகமானதுதொட்டு இங்கு பேனா’. ‘கட்டைப் பேனாஎன்ற பெயரும் இதற்கு உண்டு. கட்டை (பீடர்) இல்லாமல் வெறும் முள் (நிப்) மட்டும் நீண்ட குச்சியில் செருகப்பட்டிருக்கும். மையில் முள்ளைத் தொட்டுத் தொட்டு எழுத வேண்டும். இதனை வாங்க வசதியில்லாதவர்கள் கரிக்கோல் (பென்சில்) கொண்டு தேர்வு எழுதுவதே 1968ஆம் ஆண்டு வரை நடைமுறையில் இருந்தது.

தொட்டிங்கு பேனாவால் எழுதுவோர் மைப்புட்டி (இங்க் பாட்டில்) ஏந்தியபடி வகுப்பிற்கு வருவர்.

மைப்புட்டி வைப்பதற்கான சிறுவட்டத்தையும், எழுதுகோலுக்கான நீண்ட பள்ளத்தையும் பழைய பள்ளிகளின் மரப்பலகைகளில் இன்றும் காணலாம்.

எழுத்தாணிகால அசுர முயற்சியான எழுத்துப் பயிற்சி, ஊற்றுத் தூவல் (fountain pen) வந்தபின் வெண்ணையைத் தொட்டு நாவில் வைப்பது போன்ற எளிய செயலாகிவிட்டது.

சுவடியில் படித்த பாடல்களை மறுநாள் ஒப்பித்துக் காட்ட வேண்டும். திண்ணைப்பள்ளியில் இதனைமுறை சொல்லுதல்என்பார்கள்.

முறைசொல்லுதல் முடிஞ்சதும் வந்து சொல்லுஎன மனப்பாடப் பாடல் கேட்கும் பணியை ஆசிரியர், சட்டாம் பிள்ளையிடம் ஒப்படைத்து விடுவார். வகுப்புத் தலைவனுக்கு அன்றைய பெயர் சட்டாம் பிள்ளை. வகுப்பில் பெரியவனாகவும் இருப்பவனுக்கு இப்பகுதி வந்து சேரும்.

நாவுக்கும் உண்டு !

புதிதாக மாணவர்கள் பள்ளியில் சேர்வதைச்சுவடி தொடங்கல்என்பார்கள்.

மாணவன் பெயரைப் பனையோலையில் எழுதி, மஞ்சள் தடவிக் கடவுளை வழிபட்டு ஆசிரியர் கற்பிக்கத் தொடங்குவார். அப்போது மாணவரின் பெற்றோர், பள்ளியிலுள்ள அனைவருக்கும் காப்பரிசி தரவேண்டும்.

பச்சரிசியுடன் எள்ளும் வெல்லமும் தேங்காய்ப்பாலும் கலந்து செய்த காப்பரிசி, எல்லா மாணவர்களுக்கும் வழங்கப்படும்.

மாணவர்கள் ஒவ்வொருவரும் தம் வீட்டில் விளையும் காயோ பழமோ உப்பு புளி மிளகாயோ ஏதேனும் ஒருபொருளை அன்றாடம் ஆசிரியர் வீட்டிற்குச் சுமந்து வருவார்கள்.

மதியவுணவுக்கும் மாலை நேரத்திற்கும் இடையே சிலமாணவர்கள் சிற்றுண்டிக்காக வீட்டிற்குச் செல்ல அனுமதி கேட்பர். ‘இளம்பால் சாப்பாடுஎன்று இதற்குப் பெயர். சாப்பிட்டுத் திரும்பும் மாணவர்கள் வீட்டிலிருந்துபடிவிறகுஎடுத்து வரவேண்டும்.

வாவும் வரவும்

அமாவாசை, பவுர்ணமி நாள்களில் திண்ணைப்பள்ளி செயல்படாது. அதற்குவாவு நாள்கள்என்று பெயர். அமாவாசையைக்கார் உவாஎன்பதும் பவுர்ணமியைவெள்ளுவாஎன்பதும் இலக்கிய மரபு. ‘உவாஎன்பது இடம்மாறிவாவு’ (விடுமுறை) ஆகிவிட்டது.

விடுமுறை முடிந்து வரும் மாணவர்கள் ஆசிரியர்க்குவாவுக்காசுதரவேண்டும்.

சனிக்கிழமை தோறும் மாணவர்கள் எண்ணெய், சீயக்காய், அரப்பு, பிண்ணாக்கு கொண்டுவந்து தருவார். அறுவடையில் ஒரு பகுதி ஆசிரியர் வீட்டிற்கு வந்து சேரும்.

மாணவர் தரும் உதவியில் தான், ஆசிரியர் குடும்பம் நடத்த வேண்டும்.

உவா நாளுக்கு முதல்நாள், திண்ணைப் பள்ளி முழுவதையும் சாணமும் நீரும் கொண்டு மாணவர்கள் மெழுகிவிடுவார்கள்.

ஆண்டுக்கு ஒரு முறை வரும் மகர்நோன்பு (நவராத்திரி) காலத்தில் மாணவர்கள் ஊரிலுள்ள வீடுதோறும் சென்று கோலாட்டம், கும்மியாட்டம் எனத் தாம் கற்ற கலைகளை நிகழ்த்திக் காட்டுவர். மாணவர்களுக்குச் சுண்டலும், ஆசிரியர்களுக்கு அன்பளிப்பும் அப்போது கிடைக்கும்.

வகுப்பில் கேட்கும் செய்தி ஒவ்வொன்றையும் மாணவர்கள் ஓலைச்சுவடியில் எழுதிவிட வேண்டும். அப்போதுதான் நினைவுபடுத்திக் கொள்ளவும், பிறருக்கு எடுத்துச் சொல்லவும் முடியும்.

சுவடிப்பராமரிப்பு

ஓலைச்சுவடி எழுதுவதும் கடினம்; படிப்பதும் கடினம்; பராமரிப்பது மிகவும் கடினம். சுவடி எழுத்து, படிப்பதற்கு ஏற்ற வகையில் தெரிய வேண்டும். பூச்சி அரிக்காமல் ஓலையைப் பாதுகாக்க வேண்டும். அதற்கு ஒவ்வொரு ஓலையாய் எடுத்து அடிக்கடி அடிக்கடி பூச்சு பூச வேண்டும்.

மஞ்சள், வசம்பு, கரி, ஊமத்தைச்சாறு கொண்டு தயாரிக்கப்பட்ட பூச்சை ஓலையில் பூசுவது முக்கியம்.

கைப்பலகை (சிலேட்டு) வந்த பிறகு அதற்கும் ஒரு பூச்சு உண்டு. கரித்தூள், கோவைஇலை கலந்து அரைத்த கலவையை எழுது பலகையில் தடவி வெயிலில் காயவிட்டுக் கைப்பலகைக்கு மாணவர்கள் கருப்பு நிறமேற்றுவார்கள்.

கருப்புக்கலவை ஊறிய எழுதுபலகையைக் குழந்தைபோல் ஏந்திச் சென்று கழுவி வருவார்கள். மாணவர்களுக்குள் சண்டைவரும்போது, கைப்பலகையே போர்க்கருவியாவதும் நடக்கும். எழுதுபலகை உடைந்துபோய், வெறும் மரச்சட்டத்தை மட்டும் கையிலோ கழுத்திலோ மாட்டிக்கொண்டு, பெற்றோரும் ஆசிரியரும் தரும் பிரம்படிக்குத் தயாராய்ச் செல்லும் மாணவ வீரர்கள் உண்டு.

அந்தக்காலத் தண்டனைகள் !

அந்தக் காலப் பள்ளியில் பிரம்படி என்பது பொதுவான ஒரு செயல், எளிமையான தண்டனை.

குலைநடுக்கம் தரும் தண்டனை முறைகளும் முன்பு இருந்தன.

பள்ளிக்கு வராத மாணவனை அழைக்கச் சட்டாம்பிள்ளை மாணவர் படையோடு புறப்படுவான். ஓடிஒளியும் மாணவனைத் தேடிப் பிடித்துப் பள்ளிக்கு இழுத்து வருவார்கள். “கண்ணை மட்டும் வச்சுட்டு தோலை உறியுங்கஎனப் பெற்றோரும் மாணவனுக்கு தண்டனை வழங்க வழிமொழிவார்கள்.

பள்ளிக்கு வராமலா ஓடறே ! இப்ப ஓடு பாப்போம் !” எனச் சொல்லியபடி மாணவனுக்குத் தரப்படும் தண்டனைமுட்டிசுமத்தல்’.

காலில் வளையம் பூட்டப்பட்டு, வளையத்தோடு இணைந்த சங்கிலியின் முனையில் மரத்தாலான பெரிய முட்டி இருக்கும். முட்டியைத் தோளில் சுமந்தபடிச் சங்கிலி பூட்டிய காலுடன் மாணவன் வீட்டுக்கும் பள்ளிக்குமாகத் தள்ளாடி நடந்து கொண்டிருப்பான். இரவு பகல் எந்நேரமும் வளையமும் முட்டியும் மாணவனைப் பிரியாமல் இருக்கும்.

தண்டனைக்குப் பயந்தாவது படிப்பார்கள் என்ற நம்பிக்கையில் கோசாணம், கோதண்டம் என வகைவகையான தண்டனைகள் முன்பு இருந்தன.

தவறு செய்த மாணவனைக் கயிற்றில் கட்டி, விட்டத்தில் தொங்க விடுவார்கள். கைகள் இரண்டும் கட்டப்பட்ட நிலையில் தொங்கும் போது, கீழே நெருப்பு எரிந்து கொண்டிருக்கும். சுவாலையின் சூடுதாங்காமல் மாணவன் அலறல் அதிகமானால், நெருப்பை அணைத்து விட்டு நீண்ட ஊசியைக் கீழே நிறுத்தி வைப்பார்கள். இந்தத் தண்டனைதான் கோசாணம்.

விட்டத்தில் தொங்கும் மாணவனின் காலில் பிரம்பால் அடிப்பது கோதண்டம்.

பாடம் சொல்லாதவன் முதுகில் அமர்ந்தபடி, பாடம் ஒப்பித்தவன் குதிரை சவாரி செய்வது போல் அமர்ந்து பள்ளி வலம் வருவதும் அன்றாடத் தண்டனைகளில் ஒன்று.

தண்டனை கொடுப்பதே படிப்பதற்குத் தான் ! தண்டனைக்குப் பயந்தே படிப்பை விட்டவர்களும் இருந்தார்கள்.

பாடம் முடிந்தது

வகுப்பு முடிந்து பள்ளியை விட்டு புறப்படும்போது, ஆசிரியர் அருகில் மாணவர்கள் ஒவ்வொருவராகச் செல்ல வேண்டும்.

பூ, விலங்கு, பறவை, ஊர் இவற்றில் ஒவ்வொன்றை ஒவ்வொரு மாணவரிடமும் ஆசிரியர் மாற்றி மாற்றிக் கூறுவார். மறுநாள் அதே பெயர்களை அதே வரிசையில் அதே மாணவன் ஆசிரியரிடம் அப்படியே சொல்லியாக வேண்டும்.


மறந்து விடுவோமாஎன்ற அச்சத்தால் வீட்டிற்குச் சென்றவுடன் பெற்றோரிடம் சொல்லி மனப்பாடமாக்கிவிடுவார்கள். மறுநாள் பெற்றோரிடம் கேட்டு நினைவுபடுத்திக் கொண்டு வருவது பல மாணவர்களின் வழக்கம்.

பள்ளி தொடங்கியபோது பாடியது போலவே, பள்ளி முடியும் போதும் பாட்டு உண்டு. வீட்டிற்குச் செல்லும் மகிழ்ச்சியுடன் வேகவேகமாய் மாணவர்கள் உரத்தகுரலில் சேர்ந்து பாடுவார்கள்.

"அந்திக்குப் போறோம் நாங்கள்
அகந்தனில் விளையா டாமல்
சுந்தர விளக்கின் முன்னே
சுவடிகள் அவிழ்த்துப் பார்த்து
வந்தது வராத தெல்லாம்
வணவுடன் படித்துக் காட்டி
கந்தனார் கோழி கூவ
காலமே வாரோம் அய்யா!”

திண்ணைப் பள்ளிகளில் இப்படியொரு தேசியகீதம் அன்றாடம் ஒலித்த காலம் 1950க்குப் பின் ஓய்ந்து போனது.

கோவை மாவட்டம் உருவானது !

கோவை மாவட்டம் 1799ஆம் ஆண்டிலிருந்து ஆங்கிலேயர் ஆட்சிக்குட்பட்ட பகுதியாக இருந்தது. தாராபுரம், பவானி என இரு தலைநகரங்களுடன் இரண்டு பகுதியாக இயங்கி வந்தது அன்றைய கோவை மாவட்டம்.

கோவை நகரைத் தலைநகரமாகக் கொண்டு 24.11.1804 ஆம் நாள், ஒன்றுபட்ட கோவை மாவட்டம் உருவானது.

மேஜர் டபிள்யு. மெக்லியாடு எனும் ஆங்கிலேயர், கோவை மாவட்டத்தின் முதல் ஆட்சியராக, 06.07.1799 ஆம் நாள் பதவி ஏற்றார்.

கோவை மாவட்டத்தில் முன்பு பத்து வட்டங்கள் (தாலுகா) இருந்தன.

. கோவை
. பல்லடம்
. பொள்ளாச்சி
. உடுமலை
. தாராபுரம்
. ஈரோடு
. கரூர்
. சத்தியமங்கலம்
. பவானி
௧0. கொள்ளேகாலம்

பவானி வட்டம் 1929இல் சேலம் மாவட்டத்தோடு சேர்க்கப்பட்டது. கரூர் வட்டம் திருச்சி மாவட்டத்தோடு சேர்க்கப்பட்டு, இப்போது தனி மாவட்டம் ஆகிவிட்டது.

கொள்ளேகால் வட்டம், கோவை மாவட்டத்தில் இருந்த செய்தியே இன்று தெரியாத செய்தியாகிவிட்டது. இன்று அது கருநாடகப் பகுதி !

ஈரோடு, சத்தியமங்கலம், தாராபுரம் வட்டங்கள் 1979இல் தந்தை பெரியார் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு பெரியார் மாவட்டம் எனத் தனிமாவட்டமானது. பெரியார் மாவட்டம் எனத் தனிமாவட்டமானது. பெரியார் பிறந்த ஊர் ஈரோடு. தனி ஒருவர் பெயரில் உருவான முதல் மாவட்டம் இது தான் ! புதுப் புதுத் தலைவர்கள் பெயரில் அடுத்தடுத்து மாவட்டங்கள் பெருகிடும் ஆபத்து தலைதூக்கியபோது தலைவர்கள் பெயர் தாங்கிய மாவட்டங்கள் அனைத்தும் ஊர்ப் பெயரோடு சுருக்கப்பட்டன. பெரியார் மாவட்டம் இப்போது ஈரோடு மாவட்டம் ஆகிவிட்டது.

இன்றைய கோவை மாவட்டத்தில் ஒன்பது வட்டங்கள் (தாலுகா) உள்ளன.

. கோவை (வடக்கு)
. கோவை (தெற்கு)
. பல்லடம்
. திருப்பூர்
. மேட்டுப்பாளையம்
. அவிநாசி
. உடுமலை
. பொள்ளாச்சி
. வால்பாறை

கோவை மாவட்டத்திலிருந்து திருப்பூர் தனிமாவட்டமாக விரைவில் பிரிக்கப்படவுள்ளது.

முறையான கல்வியும் பள்ளியும்

பள்ளிக்கூடம், பாடத்திட்டம், ஆசிரியர்கள் என்னும் முறையான கல்வி முறை 1837க்குப் பின்பே தமிழ்நாட்டிற்கு அறிமுகமானது.

பொதுக்கல்வி முறையை உருவாக்குவதற்கான அரசு முறையிலான ஏற்பாடு 1829இல் தொடங்கியது.

கோவை நகருக்குப் பள்ளிக் கல்வி 1831ஆம் ஆண்டு அறிமுகமானது. அன்றைய கோவை மாவட்ட ஆட்சியர் சல்லிவன், ஆடிசு பாதிரியார் இருவர் முயற்சியில் உருவான வெர்னாகுலர் பள்ளியே கோவையின் முதல்பள்ளி.

முதன் முதலாக 1867ஆம் ஆண்டு இறுதித் தேர்வு (எஸ்.எஸ்.எல்.சி) எழுதும் வாய்ப்பைக் கோவை மாணவர்கள் பெற்றனர்.

தமிழ்நாட்டிற்குக் கல்லூரிக் கல்வி அறிமுகமானதும் அதே 1867ஆம் ஆண்டில்தான்.

சென்னைப் பல்கலைக் கழகப் பள்ளிஎன 1841இல் தோன்றி, பட்டம் வழங்கும் பணியையும் செய்து வந்த நிறுவனம், 18547இல் சென்னைப் பல்கலைக் கழகம் என்னும் பெயருடன் செயல்படத் தொடங்கியது.

பொதுக்கல்வி இயக்கிநரகம் 1884இல் உருவாக்கப்பட்டது. சென்னை மாநிலக் கல்விச்சட்டம் 1892ஆம் ஆண்டில் நடைமுறைக்கு வந்தது. உயர்நிலைக் கல்விக்கான தனிவாரியம் 1910ஆம் ஆண்டு அமைக்கப்பட்டது.

பள்ளிக் கல்வியை ஒழுங்கப்படுத்தும் வாய்ப்பாக 30.09.1921ஆம் நாள் கோவை மாவட்டக் கழகம் (ஜில்லா போர்டு) உருவானது.

கோவை, பல்லடம், பொள்ளாச்சி, கொள்ளேகாலம், கோபி, ஈரோடு எனும் ஆறு வட்டக்கழகங்கள் (தாலூகா போர்டுகள்) கோவை மாவட்டக் கழகத்தில் அடங்கியிருந்தன.

கோவை மாவட்டத்தில் 1936ஆம் ஆண்டில் இருந்த தொடக்கப்பள்ளிகளின் எண்ணிக்கை 1742.

பொதுப்பள்ளிகள் 1015
மிசன் பள்ளிகள் 268
உதவிபெறும் பள்ளிகள் 427
பிற பள்ளிகள் 32

அன்றைய கோவையில் 4632 ஊர்கள் இருந்தன. ஊர்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப பள்ளிகள் எண்ணிக்கையை உயர்த்தும் முயற்சி தொடர்ந்து நடந்தது.

அதே 1936இல் கோவை மாவட்டத்தில் இருந்த ஜில்லா போர்டு (இன்றைய அரசு) உயர்நிலைப் பள்ளிகளின் எண்ணிக்கை வெறும் ஏழுதான் !

அன்றைய உயர்நிலைப் பள்ளி வகுப்புகள், 5ஆம் வகுப்பிலிருந்து தொடங்கின. இன்றைய 6ஆம் வகுப்புக்கு முதல்படிவம் (பாரம்) என்பதே முன்பிருந்த பெயர். 11ஆம் வகுப்புக்கு 6ஆம் படிவம் என்ற பெயர் 1960ஆம் ஆண்டுவரை இருந்தது.

ஆசிரியர்கள் தலையில் தலைப்பாகை அணிந்தே அந்த நாளில் பள்ளி வருவார்கள். நீளமான குப்பாயம் (கோட்) அணிந்து, வேட்டி அணிந்திருப்பார்கள். தொப்பியும் முழுக்கால் சட்டையும் அணிந்த ஆசிரியர்கள் அரிதாகவே தென்படுவார்கள்.

தலை நிமிர்ந்து தாழ்த்தப்பட்டபோர்

தாழ்த்தப்பட்டவர்களுக்குத் தனிப்பள்ளி வழங்கும் சலுகையை 01.12.1893இல் அரசு அறிவித்தது. பொதுப்பள்ளிகளில் அவர்கள் நடத்தப்பட்ட விதமோ மிகக் கொடுமையானது.

உயர்நிலைப்பள்ளியில் படிக்கும் தாழ்த்தப்பட்ட வகுப்பு மாணவர்கள் பள்ளிக்குள் செல்ல முடியும்; வகுப்புக்குள் செல்ல முடியாது. வகுப்புக்கு வெளியே தலையைச் சுவரில் முட்டவைத்து நின்றபடிதான் தாழ்த்தப்பட மாணவர்கள் அந்த நாளில் பொதுப் பள்ளிகளில் படிதாக வேண்டும். நீதிக்கட்சி எடுத்த முயற்சியால் 1942ஆம் ஆண்டு இந்த அவலநிலை அகற்றப்பட்டது.

தாழ்த்தப்பட்டவர்கள் படிக்கக்கூடாது; சொந்தநிலம் வைத்திருக்கக் கூடாது; மாடிவீடு கட்டக் கூடாது; மண்பானையைத் தவிர வேறு உலோகப் பாத்திரங்கள் வைத்திருக்கக் கூடாது; சட்டையோ செருப்போ துண்டோ அணிந்து தெருக்களில் நடக்கக்கூடாது. இப்படி ஏராளமான ஒடுக்குமுறைகள் கோலோக்சிய காலம் இருந்தது. அந்த வரலாறு இன்றைய தலைமுறைக்குத் தெரிந்தாக வேண்டும்.

தாழ்த்தப்பட்டவர்களுக்குத் தைக் கோவில் ஏற்படுத்தியவர்கள், தனிப்பள்ளி ஏற்படுத்த 1893வரை எந்த ஊரிலும் முயலவில்லை. ‘கட்டாயக் கல்விச் சட்டம்’ 1920ஆம் ஆண்டில் நடைமுறைக்கு வந்தது. ஆறுவயது முதல் பதினான்கு வயது வரை உள்ள குழந்தைகளைக் கட்டாயம் பள்ளிக்கு அனுப்பியாக வேண்டும்; அனுப்பாத பெற்றோருக்குத் தண்டனை உண்டு. இந்தியத் துணைக்கண்ட வரலாற்றில் இப்படியொரு சட்டம் வந்தது, அந்த ஒரே முறைதான் !

எல்லாச் சாதி மாணவர்களும் வகுப்பறைக்கு உள்ளே சென்று அமரும் சூழலை 1924ஆம் ஆண்டு, நீதிக்கட்சி ஆட்சி உருவாக்கியது.

கோவையில் இருந்த இதே நிலைதான், தமிழகம் முழுவதும் இருந்தது.

வழிகாட்டிய கோவை

தமிழகத்திற்கே வழிகாட்டும் கல்வி முயற்சிகள் பலவும் கோவையில் உருவாக்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது. தமிழ்மொழி வாயிலாகப் பாடம் பயிற்றுவிக்கும் முயற்சியை முதன்முதலாகக் கோவை நகரமே தொடங்கி வைத்தது.

அந்த நாளில் எட்டாம் வகுப்புக்குமேல் அனைத்து பாடங்களையும் ஆங்கிலத்தில் மட்டுமே படிக்க முடியும். ஆங்கிலேயர் ஆட்சி, தமக்கான ஊழியர்களை உருவாக்க இப்படியோர் ஏற்பாட்டைச் செய்து வைத்திருந்தது.

ஆங்கிலேயர் ஆண்ட காலத்திலேயே ஆங்கிலப் பயிற்றுமொழி உயர்நிலைப் பள்ளிகளில் முழுதாய் அகற்றப்பட்டுவிட்டது.

அறிவியல் பாடத்தைத் தமிழ் வாயிலாக 1929ஆம் ஆண்டில் முதன்முதல் நடத்தி வழிகாட்டியது கோவை சர்வஜன உயர்நிலைப்பள்ளி. ‘தமிழ் நாட்டிற்கே வழிகாட்டுகிறது கோவை’ என அன்னிபெசண்டு அம்மையார் தமது ‘நியூ இந்தியா’ இதழில் இதனைப் பாராட்டி எழுதியுள்ளார்.

தமிழ்நாட்டின் உயர்நிலைப் பள்ளிகள் அனைத்தும், பதினொன்றாம் வகுப்புவரை தமிழில் மட்டுமே பயிற்றுவிக்க வேண்டும் எனச் சென்னை மாநில அரசு நிறைவேற்றிய ஆணை 1939ஆம் ஆண்டில் நடிமுறைக்கு வந்தது. இப்படியோர் ஆணை பிறப்பிக்கப்பட வழிகாட்டியது கோவை நகரப்பள்ளி !

இலவசக்கல்வி !

கட்டணம் கட்டிப் பள்ளிக்கல்வி பயிலும் நிலையே முன்பு இருந்த்து. வசதியுள்ளோர்க்கு மட்டும் கல்வி வழங்கும் நிலைதான், இந்தியா விடுதலை பெற்ற பிறகும் தொடர்ந்தது.

மாதந்தோறும் கட்டணம் கட்டினால் தான், பள்ளிகளில் முன்பு படிக்க முடியும்.

எல்லோருக்கும் பள்ளிகளில் இலவசக்கல்வி கிடைக்கும் அரியவாய்ப்பு 1964ஆம் ஆண்டில் மலர்ந்தது.

தமிழகக் கல்வித் திறமும், தமிழ்நாட்டு மக்கள் வாழ்வும், அதன்பின் ஒவ்வொரு துறையிலும் தனிவளர்ச்சி பெற்றுத் தழைக்கத் தொடங்கின.